செய்திகள் :

புனே: 60 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலம் உடைந்து விபத்து; ஆற்று வெள்ளத்தில் பலர் மூழ்கிய சோகம்..

post image

மஹாராஷ்டிரா புனே அருகில் உள்ளது குண்டமாலா கிராமம். இந்தக் கிராமத்தின் அருகில் ஓடும் இந்திராயானி ஆற்றின் இரும்பு பாலம் இன்று இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் கிட்டத்தட்ட 10 - 15 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி, 6 பேர் காப்பற்றப்பட்டிருக்கின்றனர்.

60 ஆண்டு பழமையான இந்தப் பாலத்தின் மேல், விடுமுறை நாள் என்பதால் அதிக சுற்றுலாப் பயணிகள் கூடியிருக்கின்றனர். அதனால், இந்த பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மஹாராஷ்டிரா பாலம் விபத்து
மஹாராஷ்டிரா பாலம் விபத்து

கடந்த இரண்டு நாள்களாக, இந்தப் பகுதியில் கனமழை பெய்து வருவதால், ஆற்றில் உள்ள தண்ணீரின் அளவு கூடியிருக்கிறது. இது மீட்பு படையினருக்கு தங்களது வேலையை கடினமாக்கி உள்ளது. ஆனாலும், மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் பாலத்தை புனரமைப்பு செய்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் பாலத்தின் ஆபத்து தெரியாமல் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து இங்கே வருகின்றனர் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

கடந்த நான்கு நாள்களில், இந்தியாவில் நடக்கும் மூன்றாவது பெரிய துயர சம்பவம் இது.

DNA மூலம் அடையாளம் காணப்பட்ட 19 உடல்கள்; 6-ம் தேதிக்கு பதில் 12-ம் தேதி பயணித்து இறந்த தம்பதி!

அகமதாபாத்தில் கடந்த 12ம் தேதி நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் குஜராத் மாநிலம், ஆனந்த் நகரை சேர்ந்த 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனந்த் நகர் வெளிநாட்டு வாழ் இந்தியர்... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: Boeing 787 குறித்து குற்றம்சாட்டிய அமெரிக்க செனட்டர்... வைரலாகும் வீடியோ!

"பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதில்லை; ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது; ஊழியர்களுக்கு அதிக வேலைகளை தருவது என எப்படி எல்லாம் முடியுமோ, அப்படி எல்லாம் நீங்கள் போயிங் மூலம் லாபத்தை சம்பாதிக்கிறீர்கள்... மேலும் பார்க்க

துபாய்: தீப்பிடித்த 67 மாடி கட்டடம்; 'ஜீரோ' காயம், உயிரிழப்புகள் - தீயணைப்பு துறையின் துரிதம்!

துபாயில் இருக்கும் 67 மாடி குடியிருப்பு 'மெரினா பினாக்கில்'. இந்தக் குடியிருப்பிற்கு 'டைகர் டவர்' என்று இன்னொரு பெயரும் உண்டு. 767 அப்பார்ட்மென்டுகள் இருக்கும் இந்தக் குடியிருப்பில் கடந்த வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

உத்தரகாண்ட்: வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்; 7 பேர் உயிரிழந்த சோகம்!

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்து இந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட 7 ப... மேலும் பார்க்க

உத்தரகாண்ட்: வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்; மீட்புப் பணிகள் தீவிரம்!

உத்தரகாண்ட்டில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி இருக்கிறது.உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருக்க... மேலும் பார்க்க

Plane crash: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்வு

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விமான விபத்து உலக... மேலும் பார்க்க