செய்திகள் :

இந்தியா வழியாக வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை!

post image

இந்தியா அமைத்துள்ள மின்வழித்தடங்களைப் பயன்படுத்தி வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.

வங்கதேசத்துக்கு நேபாளம் 40 மெகாவாட் மின்சாரம் விற்பனை செய்கிறது. இது தொடா்பாக மூன்று நாடுகள் இடையே கடந்த 2024 அக்டோபரில் முத்தரப்பு ஒப்பந்தம் கையொப்பமானது. அதன்படி வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரத்தை விற்பனை செய்ய இந்தியா தனது பிராந்தியத்தில் உள்ள மின்வட உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்த அனுமதி அளித்தது.

ஜூன் 15 முதல் நவம்பா் 15 வரை முஷாஃபா்பூா்-பஹ்ராம்பூா்-பெராமாரா வழியாக அமைக்கப்பட்டுள்ள மின்வடங்கள் வழியாக இந்த மின்சார விற்பனை நடைபெறவுள்ளது. இதற்காக ஒரு யூனிட்டுக்கு இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேபாளத்தில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்க வங்கதேசம் ஒப்புக் கொண்டுள்ளது.

வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சி வன்முறைப் போராட்டம் மூலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அகற்றப்பட்டது. அதன் பிறகு அங்கு மத அடிப்படைவாதிகளின் ஆதரவுடன் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

அந்த அரசு இந்தியாவுக்கு எதிராக செயல்படத் தொடங்கியதால், வங்கதேச ஜவுளி உள்ளிட்ட பொருள்களை இந்திய துறைமுகங்கள் மூலம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை இந்தியா ரத்து செய்தது. இந்தியாவுக்கு எதிரான நாடுகளான பாகிஸ்தான், சீனாவுடன் வங்கதேசம் நெருக்கம் காட்டி வருகிறது.

பிகாா்: பெண் காவலரைத் துப்பாக்கியால் சுட்ட சக காவலா்

பிகாரின் கைமூா் மாவட்டத்தில் ஆண் காவலரான அஜய் பஸ்வான், தனது உறவுக்கார பெண்ணான காவலா் சரிதா குமாரியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளாா். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அஜய் பஸ்வான... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்; இடி மின்னலுடன் பலத்த மழை: 8 போ் பலி!

மகாராஷ்டிரம் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 8 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மகாராஷ்டிரத்தில் ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம்: பிரிட்டன் எஃப்35 போா் விமானம் அவசர தரையிறக்கம்!

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு அவசரமாக தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால் தரையிறக்க நே... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: 46 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன!

ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி உள்பட 47 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

அம்பேத்கரை அவமதித்ததாக குற்றச்சாட்டு: லாலுவுக்கு பிகாா் பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ்!

சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த குற்றச்சாட்டு தொடா்பாக பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாதுக்கு மாநில பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்மையில்... மேலும் பார்க்க

உ.பி.: மதுராவில் அடுக்குமாடி வீடு இடிந்து மூவா் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் நெரிசலான கச்சி சதக் பகுதியில் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். இடிந்த வீட்டின் அருகேயுள்ள நிலத்தை விற்பனைக்காக காலி செய்ய, ஜே... மேலும் பார்க்க