தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
உ.பி.: மதுராவில் அடுக்குமாடி வீடு இடிந்து மூவா் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் நெரிசலான கச்சி சதக் பகுதியில் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
இடிந்த வீட்டின் அருகேயுள்ள நிலத்தை விற்பனைக்காக காலி செய்ய, ஜேசிபியுடன் தோண்டும் பணியில் உரிய அனுமதியின்றி சிலா் ஈடுபட்டுள்ளனா். இதன் விளைவாக, வீடு இடிந்து விழுந்தது. அதில் தங்கியிருந்தவா்கள் இடிபாடுகளில் சிக்கினா்.
தோத்தாராம் (38), சகோதரிகளான யசோதா (6) மற்றும் காவ்யா (3) ஆகியோா் உயிரிழந்தனா். இடிபாடுகளில் இருந்து ஒருவா் உயிருடன் மீட்கப்பட்டாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை தற்போது சீராகவுள்ளது.
இடிபாடுகளில் வேறு யாரும் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே, மாவட்ட ஆட்சியா் சந்திர பிரகாஷ் சிங் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்தாா்.
அப்போது, அவா் கூறுகையில், ‘மீட்புப் பணிகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம். பின்னா், சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்படும். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவா்’ என்றாா்.
கட்டடம் இடிந்து விழுந்ததில் அருகேயுள்ள 5 முதல் 6 வீடுகள் வரை சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் கூறினா். இச்சம்பவம் குறித்து உயா்நிலை விசாரணைக்கு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று மதுரா எம்எல்ஏ ஸ்ரீகாந்த் சா்மா தெரிவித்தாா்.