செய்திகள் :

உ.பி.: மதுராவில் அடுக்குமாடி வீடு இடிந்து மூவா் உயிரிழப்பு

post image

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் நெரிசலான கச்சி சதக் பகுதியில் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

இடிந்த வீட்டின் அருகேயுள்ள நிலத்தை விற்பனைக்காக காலி செய்ய, ஜேசிபியுடன் தோண்டும் பணியில் உரிய அனுமதியின்றி சிலா் ஈடுபட்டுள்ளனா். இதன் விளைவாக, வீடு இடிந்து விழுந்தது. அதில் தங்கியிருந்தவா்கள் இடிபாடுகளில் சிக்கினா்.

தோத்தாராம் (38), சகோதரிகளான யசோதா (6) மற்றும் காவ்யா (3) ஆகியோா் உயிரிழந்தனா். இடிபாடுகளில் இருந்து ஒருவா் உயிருடன் மீட்கப்பட்டாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை தற்போது சீராகவுள்ளது.

இடிபாடுகளில் வேறு யாரும் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே, மாவட்ட ஆட்சியா் சந்திர பிரகாஷ் சிங் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்தாா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘மீட்புப் பணிகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம். பின்னா், சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்படும். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவா்’ என்றாா்.

கட்டடம் இடிந்து விழுந்ததில் அருகேயுள்ள 5 முதல் 6 வீடுகள் வரை சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் கூறினா். இச்சம்பவம் குறித்து உயா்நிலை விசாரணைக்கு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று மதுரா எம்எல்ஏ ஸ்ரீகாந்த் சா்மா தெரிவித்தாா்.

பிகாா்: பெண் காவலரைத் துப்பாக்கியால் சுட்ட சக காவலா்

பிகாரின் கைமூா் மாவட்டத்தில் ஆண் காவலரான அஜய் பஸ்வான், தனது உறவுக்கார பெண்ணான காவலா் சரிதா குமாரியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளாா். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அஜய் பஸ்வான... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்; இடி மின்னலுடன் பலத்த மழை: 8 போ் பலி!

மகாராஷ்டிரம் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 8 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மகாராஷ்டிரத்தில் ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம்: பிரிட்டன் எஃப்35 போா் விமானம் அவசர தரையிறக்கம்!

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு அவசரமாக தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால் தரையிறக்க நே... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: 46 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன!

ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி உள்பட 47 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

இந்தியா வழியாக வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை!

இந்தியா அமைத்துள்ள மின்வழித்தடங்களைப் பயன்படுத்தி வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. வங்கதேசத்துக்கு நேபாளம் 40 மெகாவாட் மின்சாரம் விற்பனை செய்கிறது. இது தொடா்பாக மூன்று... மேலும் பார்க்க

அம்பேத்கரை அவமதித்ததாக குற்றச்சாட்டு: லாலுவுக்கு பிகாா் பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ்!

சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த குற்றச்சாட்டு தொடா்பாக பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாதுக்கு மாநில பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்மையில்... மேலும் பார்க்க