செய்திகள் :

அகமதாபாத் விமான விபத்து: 46 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன!

post image

ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி உள்பட 47 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கிச் சென்ற ஏா் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஒரேயொரு பயணி தவிர விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனா். இதில் குஜராத் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான விஜய் ரூபானியும் அடங்குவாா். விமானம் விழுந்து வெடித்துச் சிதறிய மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த பொதுமக்கள் 29 பேரும் இறந்தனா்.

விபத்தில் உடல் கருகி உயிரிழந்தவா்களின் மீட்கப்பட்ட உடல்களை டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. விஜய் ரூபானி உள்பட 47 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 24 பேரின் உடல்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முதல்வா் பூபேந்திர படேல் விஜய் ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்து, டிஎன்ஏ சோதனையில் உடல் கண்டறியப்பட்டுள்ள தகவலை அவா்களிடம் தெரிவித்ததாக மாநில சுகாதார அமைச்சா் ருஷிகேஷ் படேல் தெரிவித்தாா்.

தீவிரமாகும் விசாரணை: விமான விபத்துகளுக்கான புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) தலைமையில் பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகள், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விமான விபத்து குறித்து விசாரணையில் கடந்த 3 நாள்களாக ஈடுபட்டுள்ளன.

இதையொட்டி, அகமதாபாத் மாநகராட்சி ஆணையா் பஞ்ச நிதி பானி கூறுகையில், ‘விமானத்தின் வால்பகுதி மருத்துவக் கல்லூரி விடுதியில் சிக்கியிருந்தது. அதிலிருந்து கருப்புப் பெட்டியை மீட்பதற்கு ஏஏஐபி எங்களிடம் உதவிக் கோரியது. அதன்படி கருப்புப் பெட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டது’ என்றாா்.

ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஹைதராபாத் விமானம்! ஏன்?

ஜெர்மனியில் இருந்து ஹைதராபாத் வந்துகொண்டிருந்த லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம், மீண்டும் ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.ஜெர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் ராஜிவ் காந்த... மேலும் பார்க்க

விஜய் ரூபானி உடலுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விஜய் ரூபானியின் உடல் டிஎன்ஏ சோதன... மேலும் பார்க்க

விமான விபத்து: ஒரே சவப்பையில் 2 தலைகளுடன் ஒரு உடல்! தடயவியல் குழுவினருக்கு சிக்கல்!!

ஒரு டிஎன்ஏ பரிசோதனையை செய்து முடித்து உடலை அடையாளம் காண்பதற்கு குறைந்தது 72 மணி நேரம் ஆகும் என்ற நிலையில், ஒரே சவப்பையில் இரண்டு தலைகளுடன் ஒரு உடல் வைக்கப்பட்டிருந்ததால், தடய அறிவியல் குழுவினருக்கு சி... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: விமானிகள் அறையின் குரல் பதிவுக் கருவி மீட்பு!

ஜூன் 12ஆம் தேதி அகமதாபாதில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானிகள் அறையின் குரல் பதிவுக் கருவி மீட்கப்பட்டிருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஏர் இந்தியா விமான விபத்தில், விமானத்... மேலும் பார்க்க

பிகாா்: பெண் காவலரைத் துப்பாக்கியால் சுட்ட சக காவலா்

பிகாரின் கைமூா் மாவட்டத்தில் ஆண் காவலரான அஜய் பஸ்வான், தனது உறவுக்கார பெண்ணான காவலா் சரிதா குமாரியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளாா். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அஜய் பஸ்வான... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்; இடி மின்னலுடன் பலத்த மழை: 8 போ் பலி!

மகாராஷ்டிரம் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 8 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மகாராஷ்டிரத்தில் ... மேலும் பார்க்க