செய்திகள் :

ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஹைதராபாத் விமானம்! ஏன்?

post image

ஜெர்மனியில் இருந்து ஹைதராபாத் வந்துகொண்டிருந்த லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம், மீண்டும் ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையத்துக்கு நேற்று மாலை லுஃப்தான்சா ஏர்லைன்ஸின் எல்எச் 752 விமானம் புறப்பட்டுள்ளது.

இன்று காலை ஹைதராபாத் வந்து சேர வேண்டிய விமானம், மீண்டும் பிராங்பேர்ட் விமான நிலையத்துக்கே திருப்பிவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்கட்ட தகவலை வெளியிட்ட லுஃப்தான்சா ஏர்லைன்ஸ், ஹைதராபாத்தில் தரையிறங்க அனுமதி கிடைக்காததால் மீண்டும் ஜெர்மனிக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது ஹைதராபாத் விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில்,

“ஹைதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்த லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலைத் தொடர்ந்து, ஜெர்மனிக்கு திருப்பிவிடப்பட்டது.

விமானத்துக்கு மிரட்டல் வந்தபோது, இந்திய வான்வெளிக்கு வெளியேதான் விமானம் வந்துகொண்டிருந்தது. மீண்டும் ஜெர்மனிக்கோ அல்லது அருகிலிருக்கும் விமான நிலையத்தை தொடர்புகொண்டு அவசர தரையிறக்கத்தை மேற்கொள்ளவோ அறிவுறுத்தப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மீண்டும் ஜெர்மனிக்கு திருப்பிவிடப்பட்டதாகவும், இன்று மீண்டும் ஹைதராபாத்துக்கு பயணிகளை அழைத்து வரத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : ஏர் இந்தியா விமான விபத்து: விமானிகள் அறையின் குரல் பதிவுக் கருவி மீட்பு!

சத்ரபதி சிவாஜி சிலையைத் தொடரும் துரதிருஷ்டம்: கட்டுமானத்தில் பெரிய ஓட்டை!

மும்பை: ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மன்னரின் சிலை நிறுவப்பட்ட இடத்தில் சிலையை தாங்கி நிற்கும் கட்டுமானத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. மராட்டிய பேரரசர் சிவாஜியின் புகழைப் பறைசாற்றும் வகையில், ... மேலும் பார்க்க

இது போருக்கான சகாப்தம் அல்ல: மோடி

இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் ... மேலும் பார்க்க

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் பருவமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் திங்கள்கிழமையும் இடைவிடாத பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்பட மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்க... மேலும் பார்க்க

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: சிக்கிம் வந்தடைந்த முதல் குழு!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான 36 பக்தர்கள் கொண்ட முதல் குழு, சிக்கிமின் தலைநகர் கேங்க்டாக்கிற்கு வந்தடைந்தது. இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக... மேலும் பார்க்க

உ.பி.யில் முத்தமிட்டு விளையாடிய நபரின் நாக்கை கடித்த பாம்பு !

உத்தரப் பிரதேசத்தில் பாம்புக்கு முத்தமிட்டு விளையாடிய நபரை அந்த பாம்பு கடித்ததில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹாவைச் சேர்ந்த விவசாயி ஜிதேந்திர குமார்.... மேலும் பார்க்க