செய்திகள் :

MV Won Hai 503: 8 நாள்களாக எரியும் தீ; ஆழ்கடலில் விடப்பட்ட கப்பல்; கேரள கடலோர மக்களுக்கு எச்சரிக்கை

post image

கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை துறைமுகம் நோக்கிச் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த எம்.வி வான் ஹாய் 503 என்ற சரக்கு கப்பல் கடந்த 9-ம் தேதி தீப்பிடித்து எரிந்தது.

கேரள மாநிலம் கண்ணூர் அழிக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் எரிந்த கப்பலில் இருந்த 22 ஊழியர்களில் 18 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள நான்கு பேர் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.

கப்பலில் இருந்து சுமார் 35 கண்டெய்னர்கள் கடலில் விழுந்துள்ளன. இதற்கு இடையே கப்பலில் தீ அணைக்கும் முயற்சியில் இந்தியக் கப்பற்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியவை ஈடுபட்டு வருகின்றன.

8 நாட்களாக எரிந்துகொண்டிருக்கும் கப்பல்
8 நாட்களாக எரிந்துகொண்டிருக்கும் கப்பல்

கொழுந்துவிட்டு எரிந்த தீ அணைக்கப்பட்டாலும், கண்டெய்னருக்குள் எரியும் சிறிய அளவிலான தீ காரணமாக கரும்புகை வெளியாகிக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் குஜராத்தைச் சேர்ந்த எம்.இ.ஆர்.சி வீரர்கள் கப்பலில் இறங்கி முன்பக்கம் கயிறு கட்டினார்கள். இதை அடுத்து கப்பல் இழுத்துச் செல்லப்பட்டு சுமார் 65 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஆழ்கடலில் விடப்பட்டது.

8 நாட்களாக எரிந்துகொண்டிருக்கும் கப்பல் தற்போது சுமார் 2000 மீட்டர் ஆழமுள்ள கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், கப்பலை அதிக தூரம் இழுத்துச் செல்லும் முயற்சி நடந்துவருகிறது.

கடலில் மழை பெய்துவரும் நிலையிலும் கப்பலில் தீ அணையாமல் புகைந்துகொண்டே இருக்கிறது. எரிபொருள் இருக்கும் டேங்கில் தீப்பிடிக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒருவேளை கப்பல் எரிந்து மூழ்கினாலும், அல்லது இரண்டாகப் பிளந்தாலும் கரைப்பகுதியைப் பாதிக்காத வகையில் கப்பல் ஆழ்கடலுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MV Wan Hai 503 கப்பல் தீப்பற்றி எரியும் காட்சி
MV Wan Hai 503 கப்பல் தீப்பற்றி எரியும் காட்சி

வான் ஹாய் 503 கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்த கண்டெய்னர்கள் மற்றும் வேறு பொருட்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கோழிக்கோடு முதல் ஆலப்புழா வரையிலான கடற்கரையில் கரை ஒதுங்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் ரசாயன பொருள்கள் அடங்கிய கண்டெய்னர்கள் இருந்ததால் கரை ஒதுங்கும் பொருட்களைத் தொடவோ, அருகில் செல்லவோ வேண்டாம் எனவும், 200 மீட்டர் தூரம் தள்ளி நிற்க வேண்டும் எனவும் பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Kantara Chapter 1: "மழை, காற்று, பயம்..." - நீந்திப் பிழைத்த படக்குழு; அனுமதியில்லாமல் படப்பிடிப்பா?

கன்னட படமான காந்தாரா: சேப்டர்1 படப்பிடிப்பின்போது தொடர்ந்து புதுப்புது சவால்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே இப்படப்பிடிப்பின் போது கடந்த ஒரு மாதத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 3 ஊழியர்கள் பல... மேலும் பார்க்க

Ahmedabad plane crash: ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் - சாவின் விளிம்புவரை சென்று உயிர் தப்பிய 7 பேர்

அகமதாபாத் விமான விபத்தில் 274 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இக்கொடூரமான விபத்தில் 7 பேர் கடைசி நேரத்தில் தங்களது பயணத்தை ரத்து செய்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றனர். தாய் வைத்த அன்பு கோரிக்கை... மேலும் பார்க்க

DNA மூலம் அடையாளம் காணப்பட்ட 19 உடல்கள்; 6-ம் தேதிக்கு பதில் 12-ம் தேதி பயணித்து இறந்த தம்பதி!

அகமதாபாத்தில் கடந்த 12ம் தேதி நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் குஜராத் மாநிலம், ஆனந்த் நகரை சேர்ந்த 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனந்த் நகர் வெளிநாட்டு வாழ் இந்தியர்... மேலும் பார்க்க

புனே: 60 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலம் உடைந்து விபத்து; ஆற்று வெள்ளத்தில் பலர் மூழ்கிய சோகம்..

மஹாராஷ்டிரா புனே அருகில் உள்ளது குண்டமாலா கிராமம். இந்தக் கிராமத்தின் அருகில் ஓடும் இந்திராயானி ஆற்றின் இரும்பு பாலம் இன்று இடிந்து விழுந்துள்ளது.இந்த விபத்தில் கிட்டத்தட்ட 10 - 15 பேர் வெள்ளத்தில் அட... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: Boeing 787 குறித்து குற்றம்சாட்டிய அமெரிக்க செனட்டர்... வைரலாகும் வீடியோ!

"பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதில்லை; ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது; ஊழியர்களுக்கு அதிக வேலைகளை தருவது என எப்படி எல்லாம் முடியுமோ, அப்படி எல்லாம் நீங்கள் போயிங் மூலம் லாபத்தை சம்பாதிக்கிறீர்கள்... மேலும் பார்க்க

துபாய்: தீப்பிடித்த 67 மாடி கட்டடம்; 'ஜீரோ' காயம், உயிரிழப்புகள் - தீயணைப்பு துறையின் துரிதம்!

துபாயில் இருக்கும் 67 மாடி குடியிருப்பு 'மெரினா பினாக்கில்'. இந்தக் குடியிருப்பிற்கு 'டைகர் டவர்' என்று இன்னொரு பெயரும் உண்டு. 767 அப்பார்ட்மென்டுகள் இருக்கும் இந்தக் குடியிருப்பில் கடந்த வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க