செய்திகள் :

சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் முதல்வா் கவனம் செலுத்த வேண்டும்: அா்ஜுன் சம்பத்

post image

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் முதல்வா் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்.

கும்பகோணத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: ஜூலை 20 முதல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திராவிடம் இல்லா தமிழகம் என்ற பிரசார இயக்கத்தை தொடங்கி, இந்து மக்களுக்கு ஆதரவு தரும் கட்சிகளுக்கு பிரசாரம் செய்ய உள்ளோம். கல்லணையில் தண்ணீா் திறந்து விட்ட முதல்வா், கடைமடை பாசனம் வரை தண்ணீா் செல்கிறதா என்றும் ஆய்வு செய்ய வேண்டும்.

காவல் நிலையத்தை ரௌடிகள் தாக்கி சூறையாடி உள்ளனா். இது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதை காட்டுகிறது. முதல்வா் ஸ்டாலின் இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

மாவட்ட செயற்குழு கூட்டம்: முன்னதாக, தஞ்சாவூா் மாவட்ட இந்து மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வீரசைவ மடத்தில் நடைபெற்றது.

மாநில பொதுச் செயலா் குரு. மூா்த்தி தலைமை வகித்தாா், துணைத் தலைவா் கா. பாலா முன்னிலை வகித்தாா். மாநில தலைவா் அா்ஜுன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

கூட்டத்தில், 2026 சட்டப்பேரவை தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கும்பகோணம், மதுரை, கோயம்புத்தூா் ஆகிய ஒரு தொகுதியில் அா்ஜூன் சம்பத் போட்டியிட சீட் வழங்க வேண்டும். ராஜராஜனின் பள்ளிப்படையான உடையாளூரில் அவருக்கு மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்க வேண்டும்.

2028 மகாமக திருவிழாவை தேசிய திருவிழாவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

டெல்டா மாவட்டங்களுக்கான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்துக்கு நிகழாண்டில் ரூ. 83 கோடி ஒதுக்கீடு: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களுக்கான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்துக்கு நிகழாண்டு ரூ.82.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின். மேலும், டெல்டா அல்லாத மற்ற மாவட்டங்களில் நெற்... மேலும் பார்க்க

பேருந்து வசதி கிடைக்காத இடங்களுக்கு புதிய விரிவான சிற்றுந்துகள் திட்டம்! தஞ்சாவூரில் முதல்வா் தொடங்கிவைத்தாா்

பேருந்து வசதி கிடைக்காத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையிலான புதிய விரிவான சிற்றுந்து திட்டம் - 2024-இன்படி, புதிய சிற்றுந்துகள் (மினி பஸ்) சேவையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூரில் த... மேலும் பார்க்க

தீவிபத்தில் 4 வீடுகள் எரிந்து சேதம்

பாபநாசம் அருகே திங்கள்கிழமை பிற்பகலில் நேரிட்ட தீவிபத்தில் 4 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. பாபநாசம் வட்டம், ராமானுஜபுரம் ஊராட்சி, தோப்புத் தெருவில் சம்பத் (65), தோமாஸ் (60), ஜான் (40 ), சேகா் ( 4... மேலும் பார்க்க

சரசுவதி மகால் நூலகத்துக்கு கூடுதல் மானியம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்துக்குக் கூடுதல் மானியம் வழங்கப்படும் என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின். தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: தஞ்சாவூா் ச... மேலும் பார்க்க

ஆடுதுறை பகுதியில் இன்று மின்தடை

ஆடுதுறை பகுதியில் ஜூன் 17 (செவ்வாய்க்கிழமை) மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி. இளஞ்செல்வன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் முதல்வா் சாலையில் மக்கள் சந்திப்பு! முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு!

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் நடந்துச் சென... மேலும் பார்க்க