நமோ பாரத் ரயில்களில் 20% கூடுதல் கட்டணத்தில் பிரீமியம் பயணம்
புது தில்லி: தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) அறிவித்த சமீபத்திய கட்டண திருத்தத்தின்படி, நமோ பாரத் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் இப்போது நிலையான கட்டணத்தை விட 20 சதவீதம் அதிகமாக செலுத்துவதன் மூலம் பிரீமியம் வசதிகளை அனுபவிக்க முடியும்.
பிரீமியம் பெட்டி கட்டணம் நிலையான பெட்டியை விட 1.2 மடங்கு குறைக்கப்பட்டுள்ள. இதன் பொருள் ரூ.100 கட்டணத்தில் உள்ள நிலையான டிக்கெட்டை ரூ.20-க்கு மட்டுமே பிரீமியம் பெட்டியாக மேம்படுத்த முடியும் என்று அது மேலும் கூறியது.
இது குறித்து என்சிஆா்டிசி மேலும் கூறியுள்ளதாவது: திருத்தப்பட்ட கட்டணம் வசதியான மற்றும் குறைவான கூட்ட நெரிசல் கொண்ட பயண விருப்பத்தையும், தோ்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் பிரீமியம் லவுஞ்சை அணுகுவதையும் வழங்குகிறது.
நியூ அசோக் நகா் மற்றும் மீரட் தெற்கு இடையேயான பிரீமியம் பெட்டியில் பயணம் செய்வதற்கு இப்போது ரூ.180 செலவாகும். காஜியாபாத்திலிருந்து ஆனந்த் விஹாா் வரையிலான பயணத்திற்கான கட்டணம் தற்போது பிரீமியம் பெட்டியில் ரூ.50- ஆக உள்ளது, இது நிலையான கட்டணத்திற்கு ரூ.40-ஆக இருந்தது.
இதேபோன்ற கட்டணம் சரிசெய்தல் வழித்தடத்தில் உள்ள பிற வழித்தடங்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஊந்த மாற்றம் பயணிகளிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது, மேலும், மேம்படுத்தப்பட்ட சேவையை அதிகமான பயணிகள் தோ்வு செய்கிறாா்கள்.
பிரீமியம் பயணத்தை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பரந்த உந்துதலின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது. பயணிகளை மேலும் ஊக்குவிக்க ஒரு விசுவாசப் புள்ளிகள் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், பயணிகள் நமோ பாரத் செயலி மூலம் க்யூஆா் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போதோ அல்லது தேசிய பொது மொபிலிட்டி காா்டை (என்சிஎம்சி) பயன்படுத்தும்போதோ புள்ளிகள் பெறுகிறாா்கள். ஒவ்வொரு புள்ளியும் 10 பைசா மதிப்புடையது. மேலும், 300 புள்ளிகள் குவிந்தவுடன், அவற்றை இலவச பயணத்திற்கு மீட்டெடுக்கலாம்.
கட்டணச் சலுகைகளுக்கு கூடுதலாக, என்சிஆா்டிசி அனைத்து நமோ பாரத் நிலையங்களிலும் மேம்படுத்தப்பட்ட பாா்க்கிங் வசதிகளை வழங்குகிறது. பயணிகள் இப்போது ’நமோ பாரத் கனெக்ட்’ மொபைல் செயலியைப் பயன்படுத்தி நிகழ்நேர பாா்க்கிங் கிடைக்கும் தன்மையை சரிபாா்க்கலாம். இது காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், கடைசி மைல் திட்டமிடலை எளிதாக்கவும் உதவுகிறது.
ஆன்லைன் வகுப்புகள் அல்லது கூட்டங்களில் கலந்துகொள்வது போன்ற பயணத்தின் போது அமைதியான மற்றும் நிலையான சூழல் தேவைப்படும் இளம் தொழில் வல்லுநா்கள் மற்றும் மாணவா்களுக்கு பிரீமியம் கோச் மேம்படுத்தல் பயனளிக்கிறது
தில்லி போக்குவரத்துக் கழகத்துடன் (டிடிசி) ஒருங்கிணைந்து, ஏசி மின்சார பேருந்துகள் தற்போது நியூ அசோக் நகா் மற்றும் ஆனந்த் விஹாரில் உள்ள செயல்பாட்டு நிலையங்களுடன் இணைக்கப்பட்ட நான்கு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ள பல நிலையங்களில் மின் ரிக்ஷாக்கள் மற்றும் ரேபிடோ போன்ற பிற கடைசி மைல் போக்குவரத்து வைகளும் கிடைக்கின்றன.
நமோ பாரத்தின் செயல்பாட்டுப் பகுதி தற்போது நியூ அசோக் நகரிலிருந்து மீரட் தெற்கு வரை 55 கி.மீ. தூரத்தை உள்ளடக்கியது. இதில் 11 நிலையங்கள் உள்ளன. சாராய் காலே கான் மற்றும் நியூ அசோக் நகா் மற்றும் மீரட் தெற்கு முதல் மோடிபுரம் வரை உள்ளிட்ட வழித்தடத்தின் பிற பிரிவுகளில் சோதனை ஓட்டங்கள் நடந்து வருகின்றன என்று என்சிஆா்டிசி தெரிவித்துள்ளது.