செய்திகள் :

மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் பழுது! பயணிகள் வெளியேற்றம்!

post image

அமெரிக்காவிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை, ​ அமெரிக்காவின் ​சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த விமானம் கொல்கத்தாவில் அதிகாலை 12.45 க்கு தரையிறக்கப்பட்டது. பின்னர், 2 மணியளவில் மும்பைக்குச் செல்லவும் திட்டமிடப்பட்டிருந்தது.

போயிங் 777-200எல்ஆர் ரக விமானமான ஏஐ180, இடது என்ஜினில் ஒரு தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதனால், பயணம் தாமதமானது. மேலும், தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்வதற்காக அதிகாலை 5.20 மணியளவில், அனைத்து பயணிகளையும் இறங்குமாறு விமானத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12 ஆம் தேதி லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி, விமான ஊழியர்கள், பயணிகள், பொதுமக்கள் உள்பட 272-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர்.

இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நேற்றிரவு(ஜூன் 16) தில்லியிலிருந்து ராஞ்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதும் பல்வேறு கவலைகளை அதிகரித்திருக்கிறது.

தொடர்ச்சியாக போயிங் விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதாலும், அகமதாபாத் விமான விபத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், அனைத்து போயிங் விமானங்களிலும் கூடுதல் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உடனே வெளியேறுக..! - டிரம்ப் எச்சரிக்கை

சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கர்நாடக துணை முதல்வர்!

உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு விழாவில் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.கர்நாடக சட்டப்பேரவையில் இன்று காலை உலக சுற்றுச்சூழல... மேலும் பார்க்க

ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ சீருடையில் விமானி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவி!

உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான விமானிக்கு அவரது மனைவி ராணுவ சீருடையில் இறுதிச் சடங்கு செய்துள்ளார்.கேதார்நாத் கோயில் அருகே கௌரிகுண்ட் வனப்பகுதியில் தனியார் நிறுவன ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

விமான விபத்து: பலியானோருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் தவிக்கும் குடும்பத்தினர்!

அகமதாபாத்தில் விமான விபத்தில் பலியானோருக்கு இறுதிச்சடங்கு செய்யமுடியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியாவின் ‘ஏஐ... மேலும் பார்க்க

கனடாவில் மோடி! ஜி7 மாநாட்டில் இன்று உரையாற்றுகிறார்!

ஜி7 நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கனடா சென்றடைந்தார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்... மேலும் பார்க்க

ராபா்ட் வதேரா இன்று ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்

புது தில்லி: பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பந்தாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா... மேலும் பார்க்க

விமான விபத்து: விஜய் ரூபானியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் 119 உடல்கள் அடையாளம் காணப்பட்டன

அகமதாபாத்/ ராஜ்கோட்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியின் உடல் ராஜ்கோட்டில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்க... மேலும் பார்க்க