செய்திகள் :

சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கர்நாடக துணை முதல்வர்!

post image

உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு விழாவில் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று காலை உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்வு நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட இந்த நடைப்பயணத்தை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மற்றும் மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய டி.கே. சிவக்குமார்,

“பள்ளி நாள்களில் நான் சாரணர் இயக்கத்தில் இருந்தேன், மரங்களை காப்பாற்றவும், தண்ணீரை சேமிக்கவும், நெகிழியைத் தடை செய்யவும் குழந்தைகளுக்கு ஊக்குவிக்க விரும்புகிறோம்.

பெங்களூர் பசுமை மற்றும் சுத்தமான சுற்றுச்சூழலுக்கு பெயர் பெற்றது. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு காலநிலை கிளப்பைத் தொடங்குமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டுள்ளோம். இந்த ஆண்டு முதல் அதைத் தொடங்குகிறோம்

மரங்கள் வளர்க்கப்பட வேண்டும், மழை வர வேண்டும். அதுதான் மனித வாழ்க்கையின் ஒரு பகுதி” எனத் தெரிவித்தார்.

இந்த நடைப்பயணத்தை முடித்துவிட்டு, சட்டப்பேரவை வளாகத்துக்கு டி.கே. சிவக்குமார் சைக்கிளில் திரும்பினார். அப்போது சைக்கிளை நிறுத்தும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அருகிலிருந்த பாதுகாப்புப் படையினர் டி.கே.சிவக்குமாரை பிடித்ததால், அவர் காயமடையவில்லை.

ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு!

பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலுள்ள ஏராளமான பூங்காக்கள் மக்களின் வருக... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து: 144 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

குஜராத்தின் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 144 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதிப்படுத்தினார். மேலும் பார்க்க

ஹிமாசலில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது: 17 பேர் காயம்!

ஹிமாசல பிரதேசத்தின் மண்டியில், பத்ரிகாட் பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தபோது தனியார் பேருந்து ஜாஹுவிலிருந்து ... மேலும் பார்க்க

விபத்துக்குப் பின் இயக்கப்படவிருந்த அகமதாபாத் - லண்டன் ஏர் இந்தியா விமானம் ரத்து!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா விமானம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் 242 பேருடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன்... மேலும் பார்க்க

ராஜா ரகுவன்ஷிக்கு மாந்திரீகம் செய்த சோனம்! தந்தை குற்றச்சாட்டு!

திருமணமானவுடன் தனது மகனுக்கு சோனம் மாந்திரீகம் செய்ததாக ராஜா ரகுவன்ஷியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் திருமணமாகி சில நாள்களில் அஸ்ஸாம் ... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நாக்பூரில் அவசர தரையிறக்கம்!

கொச்சியிலிருந்து தில்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.கேரளத்தின் கொச்சி விமான நிலையத்துக்கு மஸ்கட்ட... மேலும் பார்க்க