செய்திகள் :

விபத்துக்குப் பின் இயக்கப்படவிருந்த அகமதாபாத் - லண்டன் ஏர் இந்தியா விமானம் ரத்து!

post image

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா விமானம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் 242 பேருடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் அங்கிருந்த மருத்துவ மாணவர் விடுதி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்திருக்கிறார். இந்த விபத்து நாடு முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விபத்துக்குப் பின் அந்த வழித்தடத்தில் அதாவது அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் 1.10 மணிக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம்(AI-159) தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் பயணிக்கவிருந்த 200-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு விமானக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3-வது ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை..! - முதல்வர் பதிவு

மேலும் 2 விமானங்கள் இன்று ரத்து: ஏர் இந்தியா

புது தில்லி: தில்லியிலிருந்து பாரீ்ஸ் புறப்படவிருந்த ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் ஏஐ143 விமானம் இன்று(ஜூன் 17) திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத் விமான விபத்தைக் கருத்திற்கொண்டு அனைத்து போயிங் ... மேலும் பார்க்க

பிகாரில் புதியதாக 6 விமான நிலையங்கள்! அமைச்சரவை ஒப்புதல்!

பிகாரில் புதியதாக 6 நகரங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிகாரில் புதியதாக 6 நகரங்களில் விமான நிலையம் அமைப்பதற்கு, மாநில விமானப் ப... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றிப் பொய் பிரசாரம் செய்யும் காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் பொய்யான மற்றும் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. வரும் 2027-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிக்கையை மத்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு!

பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலுள்ள ஏராளமான பூங்காக்கள் மக்களின் வருக... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து: 144 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

குஜராத்தின் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 144 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதிப்படுத்தினார். மேலும் பார்க்க

ஹிமாசலில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது: 17 பேர் காயம்!

ஹிமாசல பிரதேசத்தின் மண்டியில், பத்ரிகாட் பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தபோது தனியார் பேருந்து ஜாஹுவிலிருந்து ... மேலும் பார்க்க