விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் படம்: விரைவில் சென்னை ஷூட்டிங்; படத்தில் இணைந்த கன்னட பிரபலம் யார்?
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 'ஏஸ்' திரைப்படம் வெளியாகியிருந்தது.
இத்திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை மாத ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.
இதைத் தாண்டி, மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் 'டிரெயின்' படத்தின் பணிகளும் ஒரு புறம் நடைபெற்று வருகின்றன.

மேலும், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் திரைப்படம் தொடர்பான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான கடைசி இரண்டு திரைப்படங்களும் பெரிதளவில் மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.
இந்த விஷயம் குறித்துப் பேசப்பட்ட வேளையில், விஜய் சேதுபதி, "என்னுடைய இயக்குநர்களின் முந்தைய படங்களை வைத்து நான் அவர்களை மதிப்பிட மாட்டேன். எனக்குக் கதை பிடித்திருந்தால், அதில் நடித்துவிடுவேன்.
அப்படி, பூரி ஜெகன்நாத் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது" எனக் கூறி, பூரி ஜெகன்நாத்தின் முந்தைய படைப்புகள் குறித்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இப்படத்தை பூரி ஜெகன்நாத் தன்னுடைய பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.
அவருடன் இணைந்து நடிகை சார்மி கவுரும் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தில் தற்போது நடிகை சம்யுக்தா மேனன் இணைந்திருக்கிறார்.
முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடிக்கவிருப்பதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
மேலும், பிரபல கன்னட நடிகர் துனியா விஜய்யும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது. சென்னை, ஹைதராபாத்தில் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...