சட்டவிரோத குடியேற்றத்தை ஒருபோதும் ஏற்க முடியாது - அமெரிக்க தூதரகம் அறிவிப்பு
கடற்கரைக்குச் சென்ற கல்லூரி மாணவியை 10 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை: அனைவரும் கைது!
ஒடிஸாவில் 10 இளைஞர்களால் கல்லூரி மாணவியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரும் இன்று(ஜூன் 17) கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் 20 வயது நிரம்பிய இளம்பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கோபால்பூர் கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மது அருந்திவிட்டு திரிந்த 10 பேர் கொண்ட கும்பல் மாணவியின் நண்பரை தாக்கி கட்டிப்போட்டு விட்டு, அந்த மாணவியை தனியாக இழுத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் இன்று 10 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிந்து கோபால்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த 10 பேரில், 7 பேர் இளம்பெண்ணைச் சுற்றி அரணாக நின்று கொண்டதாகவும், அதன்பின் மூன்று இளைஞர்கள் சேர்ந்து அந்த பெண்ணை பல முறை சீரழித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த கும்பலில் இருந்த 4 பேர், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் என்பது வேதனைக்குரியது.