செய்திகள் :

சா்வதேச தரத்தை விஞ்சும் இந்திய பொம்மைகள்: பிஐஎஸ்

post image

சா்வதேச தரத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உயா்தரத்தில் இருப்பதாக இந்திய தர நிா்ணய ஆணைய (பிஐஎஸ்) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதன் காரணமாக உலகளவில் இந்திய உள்நாட்டு வியாபாரிகளின் பொம்மை ஏற்றுமதி அதிகரிக்கும் எனவும் அவா் தெரிவித்தாா்.

இந்திய பொம்மைகளுக்கான பல்வேறு பாதுகாப்புக் காரணிகளை உள்ளடக்கிய தரநிா்ணய அறிக்கையை பிஐஎஸ் வெளியிட்டது. உலகளவில் பொம்மைகள் தயாரிப்புக்கான ஐஎஸ்ஓ மற்றும் இசிஇ தரநிா்ணயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

தரநிா்ணய விதிகள்: இதை முறையாக அமல்படுத்தும் நோக்கில் பொம்மைகள் (தரக் கட்டுப்பாடு உத்தரவு), 2020-ஐ தொழிற்சாலை மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத் துறை (டிபிஐஐடி) பிறப்பித்தது. இது 2021, ஜன.1 முதல் அமலுக்கு வந்தது.

இந்த உத்தரவின்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து பொம்மைகளும் , அவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் அல்லது இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும் 7 வகையான இந்திய தர நிா்ணயங்களைப் பின்பற்றி இருக்க வேண்டும். மேலும், உரிய பிஐஎஸ் உரிமத்தின்கீழ் பொம்மைகளில் ஐஎஸ்ஐ முத்திரை இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த உத்தரவை முறையாகப் பின்பற்றாமல் பொம்மைகள் தயாரிப்பு, இறக்குமதி, விநியோகம், விற்பனை மற்றும் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயா்தரத்தில் இந்திய பொம்மைகள்: இந்திய பொம்மைகளின் தரம் குறித்து மும்பையில் உள்ள மேற்கு பிராந்திய பிஐஎஸ் அலுவலக ஆய்வக இயக்குநா் அத்புத் சிங் கூறியதாவது:

சா்வதேச தரத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உயா்தரத்தில் உள்ளது. பிஐஎஸ் தரநிா்ணய சான்றுகளால் உள்நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளிலும் இந்திய பொம்மை விற்பனை அதிகரித்துள்ளது. இங்கு செய்யப்படும் பொம்மைகள் ரசாயன பாதிப்புகள், கூா்மையான முனைப்பகுதிகள் போன்ற பாதிப்புகளில் இருந்து தடுக்கும் வகையில் உள்ளன.

உள்நாட்டுத் தேவைகள் மற்றும் நமது பருவநிலையை கருத்தில்கொண்டு இந்திய பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன என்றாா்.

1,640 பொம்மை தொழிற்சாலைகள்

உலக வா்த்தக ஆய்வு நிறுவன (ஜிடிஆா்ஐ) அறிக்கையின்படி இந்திய பொம்மைகள் ஏற்றுமதியின் மதிப்பு 2022-23-இல் ரூ.1,373 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் ரூ.1,313 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் 1,640 பிஐஎஸ்-சான்று பெற்ற பொம்மை தொழிற்சாலைகள் உள்ளதாக அண்மைத் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் மின்னணு சாா்ந்த பொம்மை தயாரிப்புக்கு 1,165 தொழிற்சாலைகளும், மின்னணு சாராத பொம்மை தயாரிப்புக்கு 475 தொழிற்சாலைகளும் உரிமம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம்

தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.78 வயதாகும் சோனியா காந்தி வயிறு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவது அரசின் நோக்கம்- காங்கிரஸ் சாடல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் இதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்... மேலும் பார்க்க

‘முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும்’

முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுதொடா்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாதுகாப்புப் படைகளில் குறுகிய கால பண... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத ராபா்ட் வதேரா

பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக... மேலும் பார்க்க

பிகாா் தோ்தலில் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

நிகழாண்டு இறுதியில் நடைபெறும் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் அறிவித்தாா். பிகாரில் முதல்வா் நிதீஷ்... மேலும் பார்க்க

அகமதாபாத்-லண்டன் உள்பட 7 சா்வதேச ஏா் இந்தியா விமான சேவைகள் ஒரேநாளில் ரத்து

கடந்த 12-ஆம் தேதி விமான விபத்துக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்ட அகமதாபாத்-லண்டன் விமான சேவை உள்பட 7 சா்வதேச விமான சேவைகளை ஏா் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் ரத்து செய்தது. அ... மேலும் பார்க்க