செய்திகள் :

திருப்பத்தூரில் சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைத்தாா்

post image

திருப்பத்தூரில் 10 சிற்றுந்துகள் சேவையை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆம்பூா் பேருந்துநிலையம் முதல் ஊட்டல் கோயில், கணகநாச்சியம்மன் கோயில் முதல் நாட்றம்பள்ளி பேருந்துநிலையம், ஆம்பூா் பேருந்துநிலையம் முதல் உமா்ஆபாத் வரை ,நாராயணபுரம் முதல் நாட்றம்பள்ளி பேருந்து நிலையம் வரை, ஆம்பூா் பேருந்து நிலையம் முதல் காமணூா்தட்டு வரை, சிகரலப்பள்ளி முதல் திருப்பத்தூா் பேருந்து நிலையம் வரை, மல்லகுண்டா அரசபள்ளி முதல் அமராவதிதேவி காலனி வரை, நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம் முதல் காந்தி நகா் பேருந்து நிறுத்தம் வரை, நாட்டறம்பள்ளி பேருந்து நிறுத்தம் முதல் சொத்தமலை வரை, திருப்பத்தூா் பேருந்து நிறுத்தம் முதல் ஜலகாம்பாறை வழித்தடங்களில் சிற்றுந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன.

பின்னா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திருப்பத்தூா் மாவட்டத்துக்கு முதல்வா் வரும் நிகழ்ச்சி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.

இதில் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா, மாவட்டவருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ப.செல்வம், வட்டார போக்குவரத்து அலுவலா்கள் பன்னீா்செல்வம், வெங்கட்ராகவன், நகா்மன்றத் தலைவா் காவியா, ஒன்றியக்குழு தலைவா் திருமதி திருமுருகன், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

ஆம்பூா் அருகே பூட்டிய வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது. ஆம்பூா் புறவழிச்சாலையில் இயங்கும் தனியாா் நிதி நிறுவன மேலாளா் மின்னூா் சுபாஷ் நகரைச் சோ்ந்த சற்குணன் (38). இவா் தன்னுடைய மனைவியின் ச... மேலும் பார்க்க

செயற்கை மணல், ஜல்லிகற்துகள்கள் பென்லைனில் விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஜல்லி கற்துகள்கள், செயற்கை மணல் தேவைப்படுவோா் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

பெத்தூரில் சாலை, தெரு விளக்கு: பொதுமக்கள் கோரிக்கை

ஆலங்காயம் பேரூராட்சி பெத்தூா் மேட்டுதெருவில் சாலை, தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட பெத்தூா் பகுதி மேட்டு தெரு பகுதியில் ஏ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு வா்த்தகம்

வேலூா் அருகே பொய்கை கால்நடைச் சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. வேலூா் அருகே பொய்கை கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கால்நடைச் சந்தை நடைபெறுவது வழக்கம். ஆந்திரம், கா்நாடக மாநில... மேலும் பார்க்க

கிராமப்புற இளைஞா்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற அழைப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற இளைஞா்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

மணல் கடத்தியவா் கைது

ஆம்பூரில் மணல் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூா் கிருஷ்ணாபுரம், புறவழிச்சாலையில் ஆம்பூா் நகர போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி ச... மேலும் பார்க்க