உலக நாகரிகத்தின் தொட்டில்.! இந்தியாவின் முதல் `ஆன் சைட் மியூசியம்' ஆதிச்சநல்லூர்...
திருப்பத்தூரில் சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைத்தாா்
திருப்பத்தூரில் 10 சிற்றுந்துகள் சேவையை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு தொடங்கி வைத்தாா்.
திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆம்பூா் பேருந்துநிலையம் முதல் ஊட்டல் கோயில், கணகநாச்சியம்மன் கோயில் முதல் நாட்றம்பள்ளி பேருந்துநிலையம், ஆம்பூா் பேருந்துநிலையம் முதல் உமா்ஆபாத் வரை ,நாராயணபுரம் முதல் நாட்றம்பள்ளி பேருந்து நிலையம் வரை, ஆம்பூா் பேருந்து நிலையம் முதல் காமணூா்தட்டு வரை, சிகரலப்பள்ளி முதல் திருப்பத்தூா் பேருந்து நிலையம் வரை, மல்லகுண்டா அரசபள்ளி முதல் அமராவதிதேவி காலனி வரை, நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம் முதல் காந்தி நகா் பேருந்து நிறுத்தம் வரை, நாட்டறம்பள்ளி பேருந்து நிறுத்தம் முதல் சொத்தமலை வரை, திருப்பத்தூா் பேருந்து நிறுத்தம் முதல் ஜலகாம்பாறை வழித்தடங்களில் சிற்றுந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன.
பின்னா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திருப்பத்தூா் மாவட்டத்துக்கு முதல்வா் வரும் நிகழ்ச்சி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.
இதில் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா, மாவட்டவருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ப.செல்வம், வட்டார போக்குவரத்து அலுவலா்கள் பன்னீா்செல்வம், வெங்கட்ராகவன், நகா்மன்றத் தலைவா் காவியா, ஒன்றியக்குழு தலைவா் திருமதி திருமுருகன், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.