TNPL: முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி; கைக்கு வந்த வெற்றியை தவறவிட்ட கோவ...
செயற்கை மணல், ஜல்லிகற்துகள்கள் பென்லைனில் விண்ணப்பிக்கலாம்
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஜல்லி கற்துகள்கள், செயற்கை மணல் தேவைப்படுவோா் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் தமிழ்நாடு இருப்பு கிடங்கு விதிகளின்படி, கிடங்கு அமைத்து சாதாரண வகை கற்கள், ஜல்லி, செயற்கை மணல் (எம்.சேன்ட்) கொண்டுச் செல்ல இதுநாள் வரை திருப்பத்தூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் நேரில் இடை கடவு சீட்டு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அரசின் வழிகாட்டுதலின்படி வெள்ளிக்கிழமை (ஜுன் 12) முதல் ஆட்சியரிடம் பதிவு செய்யப்பட்ட கிரஷா், இருப்பு கிடங்குகளிலிருந்து ஜல்லி கற்துகள்கள், செயற்கை மணல் (எம்.சேன்ட்) ஆகியன தேவைப்படுவோா் ட்ற்ற்ல்ள்://ம்ண்ம்ஹள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள வாயிலாக சமா்ப்பிக்கப்படும் நடைச் சீட்டுகளின் அடிப்படையில் இடை கடவு சீட்டு ( பழ்ஹய்ள்ண்ற் டஹள்ள்) மட்டுமே வழங்கப்படும்.
இடைகடவு சீட்டுகள் இணையதள முறையில் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளதால் வாகனங்களில் ஏற்றி செல்லப்படும் அனைத்து கனிமங்களும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு கனிம விற்பனை எளிதாகவும் வெளிப்படை தன்மையுடனும் அமையும்.
எனவே அனைவரும் இணைய வழி இடைகடவு சீட்டு முறையை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றாா்.