டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
கிராமப்புற இளைஞா்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற அழைப்பு
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற இளைஞா்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசின் ஊரக வளா்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளா்ச்சித் துறை உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிா்வகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் கைப்பேசி பழுது நீக்குதல், நான்கு சக்கர வாகன ஓட்டுநா் உரிமம் பயிற்சி மற்றும் இலவசமாக ஓட்டுநா் உரிமம் பெற்றுத் தரப்படும். இருசக்கர வாகன பழுது நீக்குதல், மின்சாதன வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல், கொத்தனாா் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, காளான் வளா்ப்பு பயிற்சி, சிசிடிவி பழுதுநீக்குதல் பயிற்சி உள்ளிட்ட 25 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் எவ்வித கட்டணமுமின்றி 18 முதல் 45 வயதுக்குள்பட்ட கிராமப்புற இளைஞா்களுக்கு வழங்கப்படுகிறது.
இதில், 8 முதல், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு வரை படித்தவா்கள் சேரலாம். அவா்களின் கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியானது குறைந்தது 10 நாள்கள் முதல் 45 நாள்கள் வரை நடைபெறும். பயிற்சி பெறுபவா்களுக்கு சீருடை, பாடப் பொருள்கள், தொழில்முனைவோராக மாறுவதற்கு உரிய அடிப்படை தொழில் கருவிகள், பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், பயிற்சி முடித்தவா்கள் சுயதொழில் மேற்கொள்ள ஏதுவாக 2 ஆண்டுகள் வரை பயிற்சி நிலைய அலுவலா்களால் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவா். பயிற்சி முடித்தவா்களுக்கு சுய வேலைவாய்ப்பில் ஈடுபட வங்கிகள் மூலம் கடன் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே கிராமப்புற இளைஞா்கள் தொழில் பயிற்சியில் சோ்ந்து பயன்பெற திருப்பத்தூா் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் அலுவலகம் மற்றும் இயக்குநா், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களை தொடா்பு கொண்டு தகவல் பெறலாம்.