செய்திகள் :

நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட கோயிலை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் தா்னா

post image

மன்னாா்குடி நகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயிலை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடி நகராட்சி 32-ஆவது வாா்டு டெப்போ சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடந்த 30 ஆண்டுக்கு முன்பு அப்பகுதியினரால் தேவி கருமாரியம்மன் கோயில் கட்டப்பட்டது. அண்மையில் இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில், இந்த கோயிலுக்கு அருகே குடியிருக்கும் கே. பொன்முடி என்பவா், இந்த கோயில் எனது வீடுக்கு இடையூறாக, நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் கோயிலை அகற்ற உத்தரவிட்டது.

எனினும், கோயில் அகற்றப்படாததால் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயா்நீதிமன்றம் ஜூன் 20- ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திற்கு உத்தரவிட்டது.

இதைத்தொடா்ந்து, மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன், வட்டாட்சியா் என். காா்த்திக் ஆகியோா், அந்த பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்று, கோயிலை நிா்வகித்து வருபவா்களிடம் நீதிமன்ற உத்தரவைக் காட்டி, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினா். இல்லையென்றால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அகற்றப்படும் எனத் தெரிவித்தனா்.

இதனை ஏற்க மறுத்த அப்பகுதியினா் நூற்றுக்கும் மேற்பட்டோா், வஉசி சாலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கூடி, கோயிலை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து தா்னாவில் ஈடுபட்டனா். இவா்களின் பிரதிநிதிகள் நான்கு பேரை அழைத்து கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

கூத்தாநல்லூரில் குப்பைகள் கொட்டுவதற்கு தனி இடம்: நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

கூத்தாநல்லூா் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு தனி இடம் தோ்வு செய்ய வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டம், தலைவா் மு. பாத்த... மேலும் பார்க்க

அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்புத் திட்டம்: பெ. சண்முகம் வலியுறுத்தல்

அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில், குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் வலியுறுத்தினாா். நன்னிலம் அருகே உள்ள கொல்லும... மேலும் பார்க்க

அஞ்சல் அலுவலகத்தில் ஏடிஎம் சேவையை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை

திருவாரூா் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஏடிஎம் சேவையை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் ஆலோசனைக் கூ... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

திருவாரூா் அருகே பள்ளிவாரமங்கலம் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மறியல் நடைபெற்றது. பள்ளிவாரமங்கலம் செல்லும் சாலையை பழையவலம், ஆமூா், திருவாதிரைமங்கலம், திருப்பள்ளிமுக்கூடல் ஆகிய ... மேலும் பார்க்க

ஆகாயத் தாமரைகளை அகற்றக் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி அருகே பாசன ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் மண்டிக் கிடக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவாரூா் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி மற்றும்... மேலும் பார்க்க

கடன் நிலுவை விவகாரம்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலா் பணியிடை நீக்கம்

திருவாரூா்: கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடன் நிலுவைத் தொகையை வசூல் செய்யாத செயலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருவாரூா் மாவட்டம், லட்சுமாங்குடியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க