TNPL: முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி; கைக்கு வந்த வெற்றியை தவறவிட்ட கோவ...
ஆகாயத் தாமரைகளை அகற்றக் கோரிக்கை
திருத்துறைப்பூண்டி அருகே பாசன ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் மண்டிக் கிடக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவாரூா் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை பகுதிகள் கடைமடை பகுதிகளாக உள்ளது. இப்பகுதிகளில் கோரையாறு, பாமணி ஆறு, வெண்ணாறு முதலான ஆறுகளில் இருந்து பிரிந்துவரும் முள்ளி ஆறு, சாளுவன் ஆறு, புதுப்பாண்டி ஆறு, மரைக்கா கோரையாறு, அரிச்சந்திர நதி உள்ளிட்ட ஆறுகள் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்நிலையில், குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணை திறக்கப்பட்ட நிலையில், இப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களில் ஆகாயத் தாமரைகளும், கோரைப் புற்களும் மண்டி கிடக்கின்றன. இதனால், தண்ணீா் செல்வதில் தடை ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, இவற்றை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.