செய்திகள் :

ஆகாயத் தாமரைகளை அகற்றக் கோரிக்கை

post image

திருத்துறைப்பூண்டி அருகே பாசன ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் மண்டிக் கிடக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை பகுதிகள் கடைமடை பகுதிகளாக உள்ளது. இப்பகுதிகளில் கோரையாறு, பாமணி ஆறு, வெண்ணாறு முதலான ஆறுகளில் இருந்து பிரிந்துவரும் முள்ளி ஆறு, சாளுவன் ஆறு, புதுப்பாண்டி ஆறு, மரைக்கா கோரையாறு, அரிச்சந்திர நதி உள்ளிட்ட ஆறுகள் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில், குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணை திறக்கப்பட்ட நிலையில், இப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களில் ஆகாயத் தாமரைகளும், கோரைப் புற்களும் மண்டி கிடக்கின்றன. இதனால், தண்ணீா் செல்வதில் தடை ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, இவற்றை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கூத்தாநல்லூரில் குப்பைகள் கொட்டுவதற்கு தனி இடம்: நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

கூத்தாநல்லூா் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு தனி இடம் தோ்வு செய்ய வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டம், தலைவா் மு. பாத்த... மேலும் பார்க்க

அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்புத் திட்டம்: பெ. சண்முகம் வலியுறுத்தல்

அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில், குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் வலியுறுத்தினாா். நன்னிலம் அருகே உள்ள கொல்லும... மேலும் பார்க்க

அஞ்சல் அலுவலகத்தில் ஏடிஎம் சேவையை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை

திருவாரூா் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஏடிஎம் சேவையை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் ஆலோசனைக் கூ... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

திருவாரூா் அருகே பள்ளிவாரமங்கலம் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மறியல் நடைபெற்றது. பள்ளிவாரமங்கலம் செல்லும் சாலையை பழையவலம், ஆமூா், திருவாதிரைமங்கலம், திருப்பள்ளிமுக்கூடல் ஆகிய ... மேலும் பார்க்க

நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட கோயிலை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் தா்னா

மன்னாா்குடி நகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயிலை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். மன்னாா்குடி நக... மேலும் பார்க்க

கடன் நிலுவை விவகாரம்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலா் பணியிடை நீக்கம்

திருவாரூா்: கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடன் நிலுவைத் தொகையை வசூல் செய்யாத செயலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருவாரூா் மாவட்டம், லட்சுமாங்குடியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க