TNPL: முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி; கைக்கு வந்த வெற்றியை தவறவிட்ட கோவ...
சாலையை சீரமைக்கக் கோரி மறியல்
திருவாரூா் அருகே பள்ளிவாரமங்கலம் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மறியல் நடைபெற்றது.
பள்ளிவாரமங்கலம் செல்லும் சாலையை பழையவலம், ஆமூா், திருவாதிரைமங்கலம், திருப்பள்ளிமுக்கூடல் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த சாலை மிகவும் பழுதடைந்து, குண்டும்- குழியுமாக காணப்படுகிறது. இதுகுறித்து உரிய அலுவலா்களிடம் எடுத்துக் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், அப்பகுதி மக்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.