செய்திகள் :

``சேது சமுத்திரத் திட்டத்தை போல கீழடி அறிக்கையில் வஞ்சிக்கிறார்கள்'' - திமுக ராஜீவ் காந்தி

post image

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மாநில மாணவர் அணிச்செயலாளர் ராஜீவ் காந்தி, "உலகிலேயே நாகரீகத்தை மனிதன் கண்டுபிடித்ததற்கு அடையாளம் இரும்பு கண்டுபிடித்ததுதான். அதன்படி சுமார் 5300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான இனமாக தமிழினமும் தமிழ் மொழியும் திகழ்கிறது.

ராஜீவ் காந்தி

கீழடியில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சான்றுகளின்படி முதல் மாந்தன் பிறந்தது தமிழ்நாடு என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. ஆனால், இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றிய பாஜக அரசு, கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட தொடர்ந்து மறுத்து வருகிறது.

இரண்டு அகழாய்வுகளை மட்டும் நடத்திய ஒன்றிய அரசு. அதன் பிறகு நிதி ஒதுக்க மனமில்லாமல் இருந்தது. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கி அதன் முடிவுகளையும் வெளிப்படையாக அறிவித்தார்.

ஒன்றிய பாஜக அரசின் சரஸ்வதி நாகரிக கட்டமைப்பு உடைந்து விடும் என்ற பயத்தோடு கீழடி அறிக்கையை வெளியிட தொடர்ந்து தாமதித்து வருகின்றனர். நீதிஅரசர் கண்டனம் தெரிவித்தும் கூட 16 வாரங்களில் வெளியிடுவதாக சொன்னவர்கள் 16 மாதங்கள் ஆகியும் வெளியிடாமல் மறுத்து வருகின்றனர்.

ராமர் பாலம் என்ற கதையைச் சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தை எப்படி நிறுத்தினார்களோ அதே போன்று கீழடி அகழாய்வு அறிக்கையையும் வெளியிடாமல் வஞ்சித்து வருகிறார்கள்.

ராஜீவ் காந்தி

இதனை கண்டித்துதான் 18 ஆம் தேதி மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தலைமையில் நடத்த உள்ளோம். இதில் மாநில, மாவட்ட மாணவரணி நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்.

உலகத் தரமான ஆய்வுகளுக்கு பிறகும் கீழடியில் அறிவியல் உண்மை இல்லை என சொல்வது அவர்களின் ஒரு சார்பின்மையை காட்டுவதோடு ஊருக்கு ஊர் சென்று திருக்குறள் பேசி தமிழ் மொழியின் பெருமை பேசுவதாக கூறி வரும் பிரதமர் மோடியின் வேஷத்தை கலைக்க இந்த ஆர்ப்பாட்டம் துணை நிற்கும்" என்றார்.

``44 டிகிரி வெயிலில் விளையும் ஆப்பிள்; ஏக்கருக்கு ரூ.5 லட்சம்..'' - விவரிக்கும் பொறியாளர்

எஞ்சினியர் டு விவசாயிமகாராஷ்டிரா விவசாயிகள் எப்போதும் விவசாயத்தில் புதுமையை புகுத்துவது வழக்கம். சோதனை அடிப்படையில் வெப்பமான பகுதியில் விளையாத பயிர்களைக்கூட தங்களது பகுதியில் விவசாயம் செய்து பார்ப்பது... மேலும் பார்க்க

US: ஈரான் அச்சுறுத்தல்; பாக்., ராணுவ தளபதிக்கு விருந்து.. ட்ரம்ப் வேலை பலிக்குமா?

பஹல்காம் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா கொடுத்த பதிலடி, இந்தியா, பாகிஸ்தான் இடையே தாக்குதலை உருவாக்கியது. இரு நாடுகளும் மே 10, 2025-ம் தேதி பேசி ஒரு முடிவுக்கு வர, தாக்குதல் நிறுத்தத்த... மேலும் பார்க்க

Doctor Vikatan: இரவு தூக்கத்தில் இழுத்துக்கொள்ளும் விரல்கள்; நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையா?

Doctor Vikatan:இரவு தூங்கும்போது கால் விரல்கள் இழுத்துக்கொண்டு போவது போல் ஆகிவிடுகிறது. குறிப்பாக, ஏசி போட்டாலோ குளிரான காலநிலையிலோ இந்தப் பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. அந்தப் பகுதியை நீவி விட்டால் வி... மேலும் பார்க்க

Skin Infection: வியர்வை, பூஞ்சைத் தொற்று, அரிப்பு.. இடுக்கு தொடைப் பிரச்னை - தீர்வு என்ன?

கோடைக்காலங்களில் இடுக்குத்தொடை பிரச்னை அதிகமாக ஏற்படும். தொடையும் அதையொட்டிய இடுக்குப்பகுதியும் உரசி உரசி அரிப்பு ஏற்படும். சொரிந்தால் புண்ணாகி விடும்; எரிச்சல் ஏற்படும்; நடப்பதற்கே சிரமமாக இருக்கும்.... மேலும் பார்க்க

``ஜூலை 9 புதுச்சேரியில் முழு பந்த்'' - அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் அறிவிப்பு

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றன. அதன்படி புதுச்சேரியில் இந்த பந்த் போராட்டத்தை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யு.சி ... மேலும் பார்க்க

Blaise Metreweli: பிரிட்டிஷ் உளவு நிறுவனத்துக்கு தலைமையேற்கும் முதல் பெண் - இவரது பொறுப்புகள் என்ன?

இங்கிலாந்தின் உளவு அமைப்பான MI6, அதன் 116 ஆண்டு வரலாற்றில் முதன் பெண் தலைமையைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அறிவித்ததன் படி, இந்த ஆண்டு MI6 தலைவர் ரிச்சர்ட... மேலும் பார்க்க