செய்திகள் :

குடியரசுத் தலைவர் முர்மு டேராடூன் பயணம்!

post image

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூன்று நாள் அரசுமுறை பயணமாக டேராடூனுக்குச் செல்கிறார்.

இந்த பயணத்திற்கான ஏற்பாடுகள் அரசு மேற்கொண்டு வருகின்றன. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக உத்தரகண்ட் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டேராடூனில் உள்ள ராஜ்பூர் சாலையில் 132 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்படும் அதிநவீன பொது பூங்காவிற்கு குடியரசுத்தலைவர் முர்மு அடிக்கல் நாட்டுவார். இந்த பூங்கா ஒரு வருடத்தில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 24 ஏக்கர் பப்பளவில் அமைந்து ராஷ்டிரபதி நிகேதன் ஜூன் 24ல் பொதுமக்களுக்கு திறக்கப்படும். ராஷ்டிரபதி நிகேதன் முன்பு ராஷ்டிரபதி ஆஷியானா என்று அழைக்கப்பட்டது. இங்கு பாரம்பரிய கட்டடத்தில் கலைப்பொருள்களின் சேகரிப்பு, பார்வையாளர்களைக் கவரும் வகையில் லில்லி தலாப், ரோகாரி தலாப், ரோஜா தோட்டம் போன்றவற்றைக் காணலாம்.

மேலும், 19 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ராஷ்டிரபதி தபோவன், பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படும். முன்னதாக, ஜூன் 18, 19 மத்தியப் பிரதேசத்திற்கு முர்முவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தூர் ஆணையர் தகவல் தெரிவிக்கிறது.

ஹரியாணாவில் மாடல் அழகி கொலை! காரணம் என்ன?

ஹரியாணாவின் பானிபட் கால்வாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஹரியாணாவைச் சேர்ந்த மாடல் அழகியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரியாணாவின், பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழக... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை: ராஜஸ்தானில் முன்கூட்டியே தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியுள்ளதாக, அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை... மேலும் பார்க்க

சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

சென்னை - தில்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் - லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைய... மேலும் பார்க்க

சகோதரரின் இறுதிச் சடங்கு: விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் பங்கேற்பு!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார், தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நொடிகளில் க... மேலும் பார்க்க

கேரளத்தில் தொடரும் கனமழை! மீண்டும் ஆரஞ்ச் அலர்ட்!

கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் அங்குள்ள சில மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளத்தில் முன்க... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர் உங்கள் பாக்கெட்டையும் காலி செய்யும்! எவ்வாறு?

இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் சண்டையானது, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை என்று மட்டும் நினைத்திருந்தால், அது மிகப்பெரிய தவறு. ஒட்டுமொத்த நாட்டுக்கும் பிரச்னைதான்.உண்மையில் சொல்லப்... மேலும் பார்க்க