"கோலி இடத்தில் அந்த வீரர்தான் இறங்குவார்" - துணை கேப்டன் ரிஷப் பண்ட் ஓப்பன் டாக்
ஈரான் அணுசக்தி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்; அணு சக்தி கசிகிறதா? - பாதிப்புகள் என்ன... IAEA எச்சரிக்கை!
'ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது' - இது இஸ்ரேல்,3 ஈரான் மீது தாக்குதல் நடத்த முன்வைத்த குற்றச்சாட்டு.
கடந்த வெள்ளிக்கிழமை (மே 13) முதல், இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு திட்ட இடங்களைத் தாக்கி வருகிறது. மேலும், அந்தத் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களையும் கொன்று வருகிறது.
இஸ்ரேல் இந்தப் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதால், 'அணு கசிவு ஏற்படுமோ?' என்கிற அச்சம் தற்போது உலகத்தில் எழுந்துள்ளது.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்!
ஈரானில் நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் என்று இரு அணுசக்தி நிலையங்கள் இருக்கிறது. இவற்றில் நடான்ஸில் யூரேனியம் அதிகம் இருக்கிறது. காரணம், அணுசக்திக்கு மிக முக்கியமான ஒன்று யுரேனியம். இந்த இரண்டு நிலையங்களும் நிலத்தடியில் அமைந்துள்ளது.
தற்போது அணு கசிவு இருக்கிறதா?
கடந்த திங்கட்கிழமை, சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் ரஃபேல் மரியானோ க்ரோஸி பேசுகையில்...
"இப்போதைக்கு இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலில் எந்தவித அணு கசிவும் இல்லை. ஆனால், இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தால் அணுசக்தி கசிய அதிக வாய்ப்பிருக்கிறது" என்று எச்சரித்துள்ளார்.
ஏன் கசிவு ஏற்படலாம்?
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13), க்ரோஸி தெரிவித்ததாவது...
"ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நடான்ஸின் மேல் பகுதிக்கும் தான் பாதிப்பு. நிலத்தடியில் இருக்கும் சென்ட்ரிஃபியூஜ் இயந்திரங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், வான்வெளி தாக்குதலினால், அந்தப் பகுதியில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. இந்த மின்சாரத் தடையினால் அணு சக்தி கசிய வாய்ப்புள்ளது.
இந்த சென்ட்ரிஃபியூஜ்களில் இருப்பது யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு. இது யுரேனியம் மற்றும் ஃப்ளோரினை இணைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது கசிந்தால் தோல் எரிச்சல் ஏற்படும். மேலும், இந்த வாயுவை சுவாசித்தால் இறப்பு ஏற்படக் கூட வாய்ப்பு உண்டு.
இந்தக் கசிவினால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று இப்போதைக்கு சர்வதேச அணுசக்தி நிறுவனத்தால் கணிக்க முடியவில்லை" என்று கூறியிருந்தார்.