செய்திகள் :

ஒரே நாளில் ஏர் இந்தியாவின் 3 சர்வதேச விமானங்கள் ரத்து!

post image

ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 3 சர்வதேச விமானங்களின் பயணங்கள் பல்வேறு காரணங்களினால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான 3 விமானங்களின் சர்வதேச பயணங்கள், தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களினால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதில், 2 விமானங்களில் பயணிகள் அமர்ந்து பறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அதன் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தில்லியிலிருந்து இன்று (ஜூன் 18) டொராண்டோ செல்ல தயாரான ஏஐ 188 விமானம், பராமரிப்பு பணிகளின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல், துபாய் - தில்லி இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் காரணங்களினால் ரத்து செய்யப்பட்டதால், அதன் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால், தில்லியிலிருந்து பாலிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம், பாதுகாப்பு காரணங்களினால் நடுவழியில் மீண்டும் தில்லிக்கு திருப்பப்பட்டு பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவதிக்குள்ளான பயணிகள் மீண்டும் தங்களது பயணத்தைத் தொடர்வதற்கான நடவடிக்கைகளை ஏர் இந்தியா அதிகாரிகள் மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று, அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் பொயிங் 787-8 விமானம், சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்திலிருந்த 241 பயணிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகள் யாருக்கானவை? கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகள் மக்களின் பயன்பாட்டிற்கானவை அல்ல என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகளை பொது பயன்பா... மேலும் பார்க்க

குரோஷியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

கனடாவில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு குரோஷியாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் ஆன்ட்ரேஜ் பிளன்கோவிக், விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்று அதிகாரிகளை ஒவ்வொருவ... மேலும் பார்க்க

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதரபாத்திலுள்ள பேகம்பேட் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அது போலியானது என உறுதியாகியுள்ளது. பேகம்பேட் விமான நிலையத்தின் வளாகத்தினுள் வெ... மேலும் பார்க்க

கரோனா பரவல்: மகாராஷ்டிரத்தில் 61 புதிய பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 61 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கரோனா தொற்றானது மீண்டும் பரவி ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் நக்சல் முகாம் தகர்ப்பு! வெடிகுண்டுகள் பறிமுதல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருந்த நக்சல்களின் முகாம் தகர்க்கப்பட்டு 14 நவீன வெடிகுண்டுகள் மற்றும் 50 கிலோ அளவிலான வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு சிங்பம் மாவட்டத்தின் சிட்பில் கிர... மேலும் பார்க்க

ஹரியாணாவில் மாடல் அழகி கொலை! காரணம் என்ன?

ஹரியாணாவின் பானிபட் கால்வாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஹரியாணாவைச் சேர்ந்த மாடல் அழகியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரியாணாவின், பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழக... மேலும் பார்க்க