செய்திகள் :

திண்டுக்கல்: குடும்பப் பிரச்னை; இரு பேத்திகளை கொன்றுவிட்டு, விபரீத முடிவெடுத்த மூதாட்டிகள்!

post image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள் பவித்ரா (28). கடந்த 9 வருடங்களுக்கு முன்பு கரூர் மாவட்டம், பள்ளபட்டி அருகே உள்ள செளந்தபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் பவித்ராவிற்கு திருமணம் ஆகி, இவர்களுக்கு லித்திக்ஸா (7), தீப்தி (5) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் பள்ளபட்டியில் வாழ்ந்து வந்துள்ள நிலையில், அந்த பகுதியை சேர்ந்த வேறொரு நபருடன் பவித்ராவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பவித்ரா மற்றும் அவரது குழந்தைகள் இருவரும் கடந்த ஒரு மாதமாக சின்ன குழிப்பட்டியில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வந்தனர்.

பவித்ரா

இந்த நிலையில் பள்ளபட்டியைச் சேர்ந்த நபருடன் நேற்று மாலை 6 மணி அளவில் பவித்ரா வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் அவமானம் அடைந்த செல்லம்மாளும் காளீஸ்வரியும் குழந்தைகள் இருவரையும் கொன்று விட்டு, வீட்டில் இருந்த ஃபேனில் தூக்கு மாட்டி இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து இடையக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்களை உடல் கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் இறந்துள்ள சம்பவம், இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா கடற்கரையில் ஆண் நண்பர் கண்முன்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - 4 மைனர் உட்பட 10 பேர் கைது

ஒடிசா கடற்கரையில் நடந்துள்ள கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் அம்மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள பெர்ஹாம்பூர் அருகில் இருக்கும் கோபால்பூர் கடற்கரைக்கு 20 வயது கல்லூரி மாணவியும், ... மேலும் பார்க்க

ஆண் நண்பரை தாக்கி இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - தீர்ப்பைக் கேட்டு கதறி அழுத குற்றவாளிகள்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், திருபுவனை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி பணியை முடித்துவிட்டு, இ... மேலும் பார்க்க

காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்; 9 வயது மகன் கண் முன்னே நடந்த கொடூரம்

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள கெர்லி என்ற இடத்தில் வசித்து வந்தவர் வீரு என்ற மான் சிங். மான் சிங் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக அவரது மனைவி அனிதா தெரிவித்தார். ஆனால் மான் சிங் உடம... மேலும் பார்க்க

நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டு, ஏ.சி. போட்டு ஓய்வு எடுத்து... திருடிச்சென்ற திருடர்கள்! | உ.பி ஷாக்

திருட வருபவர்கள் சில நேரம் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு செல்வது வழக்கம். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு வீட்டில் திருட வந்த திருடர்கள் இரவு முழுக்க இருந்து சமை... மேலும் பார்க்க

கோவை: கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிவிட்டு... அசந்து தூங்கியதால் சிக்கிய திருடன்!

கோவை, கோவைப்புதூர் பகுதியில் பால விநாயகர் கோயில் உள்ளது. அங்கு தினசரி பூஜை முடிந்தவுடன் கோயிலை பூட்டி செல்வது வழக்கம். அதன்படி கடந்த திங்கள் கிழமை இரவு கோயிலில் பூஜை முடிந்த பிறகு, வழக்கம் போல கோயிலை ... மேலும் பார்க்க

முத்திரைத்தாள் மோசடி: அதிமுக முன்னாள் MLA சாந்தி ராமு மீது 5 பிரிவுகளில் வழக்கு - என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி ராமு. படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் தே.மு.தி.க-வில் இணைந்து கட்சி பதவிகளை வகித்து வந்தார். சாந்தி ராமுபல ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்சியில் இர... மேலும் பார்க்க