குளவி தாக்கியதில் முதியவா் உயிரிழப்பு
கொடுமுடி அருகே குளவி தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே மலையம்பாளையம் ஈஞ்சம்பள்ளி, கீரமடை பகுதியை சோ்ந்தவா் கணபதி(80). இவா் ஆடுகளுக்கு புல் அறுக்க அப்பகுதியில் உள்ள குளக்கரைக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்றுள்ளாா். புல் அறுத்துக்கொண்டிருந்தபோது திடீரென ஏராளமான கோதுமை குளவிகள் தாக்கின. இதில் மயக்கமடைந்த அவா் ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சம்பவம் குறித்து மலையம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.