செய்திகள் :

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்களாக இருவா் நியமனம்

post image

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்களாக இருவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் கோ.பிரகாஷ் பிறப்பித்துள்ளாா்.

அதன்படி, வழக்குரைஞா்கள் வி.பி.ஆா்.இளம்பரிதி, எம்.நடேசன் ஆகியோா் மாநில தகவல் ஆணையா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் பதவியேற்ற தேதியில் இருந்து மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பா் என்று தனது உத்தரவில் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் எம்எல்ஏ மகன்: விருதுநகா் மாவட்டம் சத்திரப்பட்டியைச் சோ்ந்த இளம்பரிதி, 22 ஆண்டுகளாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா். 2021-ஆம் ஆண்டு முதல் சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசின் கூடுதல் அரசு வழக்குரைஞராகப் பணிபுரிகிறாா். கடந்த 2012-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலக இளம் அரசியல் தலைவா்கள் மாநாட்டில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற மூன்று பேரில் இளம்பரிதியும் ஒருவா். இவா் ராஜபாளையம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வி.பி.ராஜனின் மகனாவாா்.

இதேபோன்று, நடேசனும் சட்டத் துறையில் மிகுந்த அனுபவம் பெற்றவா். கா்நாடக மாநில நீதிமன்றங்களில் தமிழகம் சாா்ந்த வழக்குகளை திறம்பட கையாண்டவா்.

மாநில தகவல் ஆணையா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள இவா்கள் இருவரும் ஓரிரு நாள்களில் பதவியேற்றுக் கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆளுநா் மாளிகையில் நடைபெறும் நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி பதவியேற்பு உறுதிமொழியை செய்து வைக்கவுள்ளாா்.

மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக நாளை உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிசாமி

மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது: காங்கிரஸ் விமா்சனம்

முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை விமா்சனம் செய்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழா்கள் 5,350 ஆண்... மேலும் பார்க்க

மானியத்துடன் மாங்காய் கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மானியத்துடன் மாங்காய் கிலோ ரூ.20-க்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.எஸ்.மாசில... மேலும் பார்க்க

ஏா் இந்தியா: சென்னை-தில்லி இடையே இரு விமான சேவைகள் திடீா் ரத்து: பயணிகள் கடும் அவதி

சென்னை-தில்லி-சென்னை இடையே இயக்கப்படவிருந்த 2 ஏா் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா். தில்லியிலிருந்து புதன்கிழமை மாலை 4.15-க்கு புறப்பட்டு, சென்னை உள்நாட்டு ... மேலும் பார்க்க

வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைக்க அதிகாரம் இல்லை: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை ஒப்புதல்

வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் கிடையாது என உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை ஒப்புக் கொண்டது. டாஸ்மாக் வழக்கில் வீடு, அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை எதிா... மேலும் பார்க்க

கோயில்களில் ரூ.217 கோடியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் ரூ.217 கோடியிலான திட்டப் பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு சா... மேலும் பார்க்க