செய்திகள் :

``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - மீண்டும் ட்ரம்ப்

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் இறுதியில் (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.

இதனால் இரு நாடுகளுக்கிடையே மோதல் அதிகரித்தது. பின்னர், இருநாடுகளும் மோதலை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.

ஆனால், வர்த்தகத்தை முன்வைத்து இந்த மோதலை நான்தான் முடிவுக்கு கொண்டுவந்தேன் என்று ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கூறிவந்தார். இருப்பினும், ட்ரம்ப்பின் இத்தகைய கூற்றை மத்திய அரசு மறுத்துவந்தது.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

நேற்று முன்தினம்கூட, கனடாவில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டிலிருந்து ட்ரம்ப் முன்கூட்டியே கிளம்பியதால், பிரதமர் மோடியும் அவரும் சந்திக்க முடியாமல் போனது.

அதன்பிறகு ட்ரம்பிடம் செல்போனில் பேசிய மோடி "இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யவில்லை" என்று அவரிடமே கூறியதாகச் செய்தியாளர்களிடம் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் நிறுத்தினேன் என ட்ரம்ப் மீண்டும் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "பாகிஸ்தானை நான் நேசிக்கிறேன். மோடி அற்புதமான மனிதர்.

மோடியிடம் செல்போனில் பேசினேன். இந்தியாவுடன் நாங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்யப் போகிறோம்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதலை நான்தான் நிறுத்தினேன். இதில் நான் எந்தக் கதையும் எழுதவில்லை.

இரண்டு பெரிய அணுசக்தி நாடுகளுக்கு இடையிலான போரை நான் நிறுத்தினேன். இது மக்களுக்கும் தெரியும்." என்று கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான் மோதலில் அமெரிக்க மத்தியஸ்தம் செய்யவில்லை என்று ட்ரம்மிடம் மோடியே கூறியதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் தெரிவித்த அடுத்த நாளே, இருநாடுகளுக்கிடையிலான மோதலை நான்தான் நிறுத்தினேன் என மீண்டும் ட்ரம்ப் கூறியிருப்பதால், மத்திய அரசு கூறுவது உண்மைதானா என கேள்வியெழத் தொடங்கியிருக்கிறது.

`ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு' -உசுப்பேற்றிய பாக்., ராணுவ தளபதிக்கு வெள்ளை மாளிகையில் விருந்து

மீண்டும் மீண்டும் இந்தியா மறுத்தும், 'நான் தான் இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்து வைத்தேன்' என்று கூறி வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். நேற்று நடந்த இந்திய பிரதமர் மோடி ... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் தாக்குதலை நிறுத்த முன்வந்த புதின்; ட்ரம்ப் கேட்ட உதவி - அமெரிக்கா, ரஷ்யா முரண்!

இஸ்ரேல் - ஈரான் தாக்குதலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் தொடங்கி ஆறு நாள்கள் ஆகிறது. இந்தத் தாக்குதலை இஸ்ரேலும் விட்டுக்க... மேலும் பார்க்க

Iran - Israel: ``நான் என்ன செய்யப்போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது..'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் ஈரான் மீது போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி இன்றுடன் 7-வது நாளை அடைந்திருக்கிறது. ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி, நேற்று ஒரு தொலைக்காட்சிய... மேலும் பார்க்க

``கீழடி ஆய்வறிக்கை வெளியிடவில்லை என்றால் நாடாளுமன்றத்தை முடக்குவோம்'' - திருச்சி சிவா

கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் திமுக மாணவரணி மாநிலச்செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக துணை பொதுச்செயலாளர் தி... மேலும் பார்க்க

தேமுதிக: விஜயகாந்த் போல விஜயை வைத்து மக்கள் நலக் கூட்டணியா? - பிரேமலதா சொன்ன பதில்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று (ஜூன் 17) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். 2016 தேர்தலில் விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியை அமைத்ததுப் போல இந்தத் தேர்தலில் விஜய்யை வைத்து ம... மேலும் பார்க்க

``44 டிகிரி வெயிலில் விளையும் ஆப்பிள்; ஏக்கருக்கு ரூ.5 லட்சம்..'' - விவரிக்கும் பொறியாளர்

எஞ்சினியர் டு விவசாயிமகாராஷ்டிரா விவசாயிகள் எப்போதும் விவசாயத்தில் புதுமையை புகுத்துவது வழக்கம். சோதனை அடிப்படையில் வெப்பமான பகுதியில் விளையாத பயிர்களைக்கூட தங்களது பகுதியில் விவசாயம் செய்து பார்ப்பது... மேலும் பார்க்க