செய்திகள் :

திமுக அரசு என்றாலே தொழில் வளர்ச்சிதான்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

post image

தொழில் துறையில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) தொடக்கிவைத்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த கண்காட்சி இன்று முதல் ஜூன் 23 வரை நடைபெறுகிறது.

நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "இந்தியாவின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 11.9% ஆகும். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. 14 தொழிற்பேட்டைகளை உருவாக்கியுள்ளோம். இன்னும் உருவாக்கவுள்ளோம்.

பதிவு செய்யப்பட்ட சிறு, குறு தொழில்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 3-ம் இடத்தில் உள்ளது. மோட்டார் வாகனம், ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்.

ஜவுளி இயந்திரங்கள், மின்னணு பொருள்கள் உற்பத்தியில் 2-வது இடம். இந்தியாவின் இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் உற்பத்தியில் 17.66 சதவீதத்துடன் இரண்டாம் இடம்.

தமிழ்நாட்டில் தொழில் முனைவோரில் பெண்களின் விழுக்காடு 30%. இந்தியாவில் 14.90 லட்சம் பதிவு செய்யப்பட்ட பெண் தொழிலாளர்களில் 6,30,000 பேர் அதாவது 42% பேர் தமிழ்நாட்டுப் பெண்கள்.

2021- 22ம் ஆண்டு முதல் ஏற்றுமதிகளை அதிகரித்து வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். தொழில் வளர்ச்சி, தொழில் துறை, தொழிலாளர் நலனுக்கும் என்ன தேவை என்பதை கண்காணித்து செயல்படுகிறோம்.

பல்வேறு சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கடனட்டை 4 ஆண்டுகளில் 59,915 புதிய தொழில்முனைவோருக்கு ரூ. 2,031 கோடி மானியத்துடன் ரூ.5,250 கோடி கடன் வழங்கியுள்ளோம். அதனால் திமுக என்றாலே தொழில் வளர்ச்சிதான்" என்று பேசினார்.

இதையும் படிக்க | வெடித்துச் சிதறிய எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்!

மருத்துவமனை அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு கிடையாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு என்பது கிடையாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஜூன் 21 வரை வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் ஜூன் 21 வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 19, 20 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் கார... மேலும் பார்க்க

அரசு ஜீப் மீது பேருந்து மோதியதில் பெண் கோட்டாட்சியர் பலி!

திருச்சி அருகே அரசு ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் பெண் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா பலியானார்.திருச்சி மாவட்டம் முசிறி வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஒ.) ஆராவமுத தேவசேனா பணியாற்றி வந்தார்.இந்நில... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூன் 19) ஓரிரு இடங்களிலும், பு... மேலும் பார்க்க

நித்யானந்தா எங்கு உள்ளார்? நீதிமன்றம் கேள்வி

மதுரை: நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா நாடு எங்கிருக்கிறது? அங்கு எப்படிச் செல்வது? என மதுரை உயர் நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியிருக்கிறது.மதுரை ஆதீனத்துக்குள் நுழைவது தொடர்பான உத்தரவுக்கு எதிராக ந... மேலும் பார்க்க

அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய்: ராமதாஸ்

பாமகவில் ஏற்பட்டுள்ள குழுப்பத்துக்கு திமுகதான் காரணம் என அன்புமணி கூறுவது அப்பட்டமான கடைந்தெடுத்த பொய் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமக கூட்டத்தில் பேசும்... மேலும் பார்க்க