செய்திகள் :

இடைத்தேர்தல்: நடுவிரலில் மை வைத்து அவமதித்தாக பாஜக வேட்பாளர் குற்றச்சாட்டு!

post image

மேற்கு வங்க இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவர் தனது தனது நடுவிரலில் தேர்தல் அதிகாரிகள் வேண்டுமென்றே மை வைத்து அவமானப்படுத்திவிட்டதாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேற்கு வங்கம், கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஜூன் 19) காலை தொடங்கி நடைபெற்றது.

கேரளத்தின் நிலம்பூா், குஜராத்தின் விசாவதா், காடி, மேற்கு வங்கத்தின் காலிகஞ்ச் மற்றும் பஞ்சாபின் லூதியானா (மேற்கு) தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

மேற்கு வங்கத்தின் காலிகஞ்ச் தொகுதியில் பாஜக சார்பில் நதியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிஷ் கோஷ் போட்டியிட்டார். இவர் டெபக்ராமில் உள்ள 173-வது பூத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். இவர் வாக்கு செலுத்தியபின்னர், தேர்தல் அதிகாரிகள் இவரின் நடுவிரலில் மை வைத்துள்ளனர்.

இதனால், கோபமடைந்த ஆஷிஷ் கோஷ் வேண்டுமென்றே ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் பூத் ஏஜண்டுகள் நடுவிரலில் மை வைத்து தன்னை அசிங்கப்படுத்திவிட்டதாக அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஆஷிஷ் கோஷ் கூறும்போது, “முதலில் நான் வாக்களிக்கச் சென்றபோது அவர்கள் என் கையில் மை வைக்கவில்லை. வாக்களித்துவிட்டு திரும்பிச் சென்று கேட்டபின்னர் வேண்டுமென்றே அவர்கள் என்னுடைய நடுவிரலில் மை வைத்துவிட்டனர்.

இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. இது திரிணமூல் காங்கிரஸின் சதியே தவிர, வேறு எதுவுமில்லை. அவர்கள் அவமானப் படுத்தவேண்டும் என்ற நோக்கத்திலேயே இவ்வாறு செய்துள்ளனர்” என்றார்.

பாஜக வேட்பாளரின் குற்றச்சாட்டுகளால் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ஈரான் தலைமை மதகுரு கமேனிக்கு இஸ்ரேல் வெளிப்படை எச்சரிக்கை!

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி! ஒருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள... மேலும் பார்க்க

ஒடிசாவில் தொடரும் காலரா! பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!

ஒடிசாவில் காலரா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 2 மாவட்டங்களின் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் திறப்பை ஒத்திவைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோடைக்கால விடுமுறைகள் ம... மேலும் பார்க்க

ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு! உண்மையைக் கூறிய ஊழியர்கள் பணிநீக்கம்!

கடந்தாண்டில் லண்டனுக்கு இயக்கப்பட்ட போயிங் விமானத்தில் கோளாறு இருந்ததைச் சுட்டிக் காட்டிய, 2 விமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யபட்டதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்த... மேலும் பார்க்க

கனமழையால் நிரம்பிய குஜராத் அணைகள்! 3 நாள்களில் 1000 பேர் மீட்பு!

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.குஜராத் மாநிலத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த ஜூன்- 16, 17 மற்றும் 18... மேலும் பார்க்க

பிரதமர் வருகையால் ஒடிஷா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி வருகையால், புவனேஸ்வர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பாஜக தலைமையில் 3-ஆவது முறையாக ஆட்சி அமைக்கப்பட்டு, ஓராண்டு முடிவடைந்த நிலையில், அதன் கொண்டாட்ட நிகழ்... மேலும் பார்க்க

ஒடிசாவில் அதிகரித்துவரும் வன்கொடுமைகள்: 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்!

ஒடிசா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. இதுதொடர்பாக அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளி... மேலும் பார்க்க