செய்திகள் :

கனமழையால் நிரம்பிய குஜராத் அணைகள்! 3 நாள்களில் 1000 பேர் மீட்பு!

post image

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

குஜராத் மாநிலத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த ஜூன்- 16, 17 மற்றும் 18 ஆகிய 3 நாள்களில் அளவுக்கு அதிகமான மழை பெய்தது பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஏராளமான மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில், அம்மாநிலத்தின் தென் பகுதிகளான, அஹ்வாவில் 250 மி.மீ. மற்றும் கப்ரதாவில் 241 மி.மீ. மழை பெய்தது பதிவாகியுள்ளது. இதனால், குஜராத்தின் 9 அணைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும், தொடர்ந்து அதிகரிக்கும் நீர் அளவால், 15 அணைகள் உச்சக்கட்ட எச்சரிக்கை நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும், மாநில பேரிடர் மீட்புப் படையின் 20 குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 1,060 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், 400-க்கும் மேற்பட்ட கால்நடைகளும் மீட்கப்பட்ட உயரமான பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அதிகப்படியான மழை பெய்துள்ள நிலையில், 27 மாவட்டங்களிலுள்ள 160 தாலுக்காக்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், குஜராத்திலுள்ள 206 அணைகளில் 9 அணைகள் முழுவதுமாகவும், 25 அணைகள் 70 முதல் 100 சதவிகிதமும், 22 அணைகள் 50 முதல் 70 சதவிகிதமும், 57 அணைகள் 25 முதல் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மழை மற்றும் வெள்ளத்தால், குஜராத்தின் மின்சார விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 13,285 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 13,209 கிராமங்களில் அந்தப் பாதிப்புகள் சீராக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, போடாட் மாவட்டத்தின், லதிதாத் கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 9 பேர் சென்ற கார் அடித்துச் செல்லப்பட்டது. இதில், 2 பேர் மீட்கப்பட்ட நிலையில் 7 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஒடிசாவில் வன்கொடுமைகள் அதிகரிப்பு: 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்!

என்னதான் ஆச்சு ஏர் இந்தியாவுக்கு..? மீண்டும் தில்லிக்கே திரும்பிய விமானம்!

தில்லியிலிருந்து வியட்நாம் நாட்டுக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் மீண்டும் தில்லியிலேயே தரையிறக்கப்பட்டது. தில்லியிலிருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகரத்துக்கு இன்று (ஜூன் ... மேலும் பார்க்க

ஆர்சிபி கூட்ட நெரிசல் விவகாரம்! 3 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதத்துடன் மசோதா முன்மொழிவு!

பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசல் கட்டுப்பாடு மசோதா முன்மொழியப்பட்டது.ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூரில... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியைப் புகழ்ந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

பாஜக அரசின்கீழ் தில்லியில் நல்லாட்சி நடத்தப்படுவதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.தில்லி தலைமை செயலகத்துக்கு வருகை தந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், தில்லி முதல்வர் ரேகா குப்தா, த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி! ஒருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள... மேலும் பார்க்க

ஒடிசாவில் தொடரும் காலரா! பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!

ஒடிசாவில் காலரா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 2 மாவட்டங்களின் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் திறப்பை ஒத்திவைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோடைக்கால விடுமுறைகள் ம... மேலும் பார்க்க

ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு! உண்மையைக் கூறிய ஊழியர்கள் பணிநீக்கம்!

கடந்தாண்டில் லண்டனுக்கு இயக்கப்பட்ட போயிங் விமானத்தில் கோளாறு இருந்ததைச் சுட்டிக் காட்டிய, 2 விமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யபட்டதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்த... மேலும் பார்க்க