செய்திகள் :

ஆர்சிபி கூட்ட நெரிசல் விவகாரம்! 3 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதத்துடன் மசோதா முன்மொழிவு!

post image

பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசல் கட்டுப்பாடு மசோதா முன்மொழியப்பட்டது.

ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் கூட்ட நெரிசல் கட்டுப்பாடு குறித்து, அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் வரைவு மசோதா முன்மொழியப்பட்டது.

மசோதாவில் தெரிவித்ததாவது, காவல்துறை உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாத அல்லது சட்டத்தை மீறும் எவருக்கும் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். விளையாட்டு, சர்க்கஸ் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், காவல்துறை அனுமதியைப் பெறத் தவறினாலோ, கூட்டத்தினை நிர்வகிக்க முடியாவிட்டாலோ, ஏற்படும் எந்தவொரு தீங்குக்கும் ஈடு செய்யாவிட்டாலோ கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 5 லட்சம் வரையில் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் அலட்சியம் காரணமாக, மரணம் அல்லது யாருக்கேனும் காயம் ஏற்பாட்டால், அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.

இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள், ஜாமீனில் வெளிவர முடியாது; வழக்குகளை முதல்தர நீதிபதிகள் விசாரிப்பர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், பாரம்பரிய மற்றும் மதக் கூட்டங்களான கண்காட்சிகள், தேரோட்டம், பல்லக்கு ஊர்வலம், படகு திருவிழாக்கள் மற்றும் பிற மதக் கொண்டாட்டங்களுக்கு இந்த மசோதா விலக்கு அளிக்கிறது.

இதையும் படிக்க:ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு! உண்மையைக் கூறிய ஊழியர்கள் பணிநீக்கம்!

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்களின் பணம் மும்மடங்கு அதிகரிப்பு

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்களின் பணம் கடந்த 2024-ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டைவிட மும்மடங்காக ரூ.37,600 கோடி அளவுக்கு உயா்ந்துள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட ஆண்டறிக்கை... மேலும் பார்க்க

இயற்கையான சூழலில் யோகா பயிற்சி

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (சிசிஆா்எஸ்) இயற்கையான சூழல்களில் யோகா பயிற்சியை ஊக்குவிக்க தாம்பரம் சானடோரியம் பச்சமலைக்குன்றில் ‘சித்த ஹரி... மேலும் பார்க்க

‘தொலைத்தொடா்புத் துறையில் மேம்பாடு: 125 ஆய்வுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்’

அடுத்த தலைமுறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை ஊக்குவிக்க மத்திய அரசு உருவாக்கிய தொலைத்தொடா்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி உதவியால் 125-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு... மேலும் பார்க்க

லோக்பால் அமைப்பில் வழக்கு விசாரணைப் பிரிவு உருவாக்கம்

லோக்பால் சட்டம் இயற்றப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அமைப்பில் வழக்கு விசாரணைப் பிரிவு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, புகாா் மீது விசாரணை நடத்துவதற்கான பிரிவு அமைக்கப்பட்ட நிலையில், தற்... மேலும் பார்க்க

என்னதான் ஆச்சு ஏர் இந்தியாவுக்கு..? மீண்டும் தில்லிக்கே திரும்பிய விமானம்!

தில்லியிலிருந்து வியட்நாம் நாட்டுக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் மீண்டும் தில்லியிலேயே தரையிறக்கப்பட்டது. தில்லியிலிருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகரத்துக்கு இன்று (ஜூன் ... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியைப் புகழ்ந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

பாஜக அரசின்கீழ் தில்லியில் நல்லாட்சி நடத்தப்படுவதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.தில்லி தலைமை செயலகத்துக்கு வருகை தந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், தில்லி முதல்வர் ரேகா குப்தா, த... மேலும் பார்க்க