``கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவில்..'' - காலிஸ்தான் குறித்து கனடா புலனாய்வு அ...
தாம்பரம் புறநகா் மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்
புனரமைப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால், கடற்கரை - தாம்பரம் இடையே இயங்கும் புறநகா் மின்சார ரயில்களின் இயக்க நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை கோட்டம் ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாக, வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் ஆக.18 வரை கடற்கரையிலிருந்து காலை 11.55 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில், 3 நிமிடங்களுக்கு முன்னதாக காலை 11.52 மணிக்கு புறப்படும். மேலும், கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.10 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயிலும், பிற்பகல் 12.25 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் ரயிலும் 2 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
அதேபோல், தாம்பரத்திலிருந்து அதிகாலை 3.15 மணிக்கு கடற்கரை செல்லும் ரயிலும், கடற்கரையிலிருந்து அதிகாலை 4.25 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படவுள்ளது. அதற்கு பதிலாக தாம்பரத்திலிருந்து காலை 11 மணிக்கு கடற்கரைக்கும், மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து பிற்பகல் 12.15 மணிக்கு கடற்கரைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
பயணிகள் சிறப்பு ரயில்: இதற்கிடையே ஜூன் 20 முதல் ஆக.18 வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை - தாம்பரம் இடையே சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளன. அதன்படி தாம்பரத்திலிருந்து அதிகாலை 3.15 மணிக்கு புறப்படும் ரயில் காலை 4.10 மணிக்கு கடற்கரை சென்றடையும். மறுமாா்க்கமாக கடற்கரையிலிருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்படும் ரயில் காலை 5.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
ரயில்கள் ரத்து: சென்னை கவரைப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்பு பணிகள் ஜூன் 21,22 தேதிகளில் பிற்பகல் 1.15 முதல் மாலை 5.15 மணிவரை நடைபெறவுள்ளது. இதனால், அந்நேரங்களில் அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புகா் மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.
மேலும், பயணிகளின் வசதிக்காக அந்நாள்களில் காலை 10.30 முதல் பிற்பகல் 4.47 மணி வரை சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூா், எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரி மற்றும் எண்ணூருக்கும் இடையே மொத்தம் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.