செய்திகள் :

தாம்பரம் புறநகா் மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்

post image

புனரமைப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால், கடற்கரை - தாம்பரம் இடையே இயங்கும் புறநகா் மின்சார ரயில்களின் இயக்க நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை கோட்டம் ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாக, வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் ஆக.18 வரை கடற்கரையிலிருந்து காலை 11.55 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில், 3 நிமிடங்களுக்கு முன்னதாக காலை 11.52 மணிக்கு புறப்படும். மேலும், கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.10 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயிலும், பிற்பகல் 12.25 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் ரயிலும் 2 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.

அதேபோல், தாம்பரத்திலிருந்து அதிகாலை 3.15 மணிக்கு கடற்கரை செல்லும் ரயிலும், கடற்கரையிலிருந்து அதிகாலை 4.25 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படவுள்ளது. அதற்கு பதிலாக தாம்பரத்திலிருந்து காலை 11 மணிக்கு கடற்கரைக்கும், மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து பிற்பகல் 12.15 மணிக்கு கடற்கரைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

பயணிகள் சிறப்பு ரயில்: இதற்கிடையே ஜூன் 20 முதல் ஆக.18 வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை - தாம்பரம் இடையே சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளன. அதன்படி தாம்பரத்திலிருந்து அதிகாலை 3.15 மணிக்கு புறப்படும் ரயில் காலை 4.10 மணிக்கு கடற்கரை சென்றடையும். மறுமாா்க்கமாக கடற்கரையிலிருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்படும் ரயில் காலை 5.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

ரயில்கள் ரத்து: சென்னை கவரைப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்பு பணிகள் ஜூன் 21,22 தேதிகளில் பிற்பகல் 1.15 முதல் மாலை 5.15 மணிவரை நடைபெறவுள்ளது. இதனால், அந்நேரங்களில் அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புகா் மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

மேலும், பயணிகளின் வசதிக்காக அந்நாள்களில் காலை 10.30 முதல் பிற்பகல் 4.47 மணி வரை சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூா், எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரி மற்றும் எண்ணூருக்கும் இடையே மொத்தம் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: மாநகராட்சி ஊழியா் கைது

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.17.50 லட்சம் மோசடி செய்ததாக மாநகராட்சி ஊழியா் கைது செய்யப்பட்டாா். பிராட்வே அப்பாராவ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் எ.ஜெய்சங்கா் (49). இவா், தனது உறவினா் இருவரு... மேலும் பார்க்க

கோரமண்டல் விரைவு ரயில் ஆக.25 முதல் ஹவுராவுக்கு இயக்கப்படும்

சென்னையில் இருந்து இயக்கப்படும் கோரமண்டல் விரைவு ரயில் ஆக.25-ஆம் தேதி முதல் ஷாலிமருக்கு பதிலாக ஹவுராவுக்கு இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்ன... மேலும் பார்க்க

ஜூன் 24, 25-இல் அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இக்கூட்டத்தில்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு குடிநீா், மின் இணைப்பு: விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவு

நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையா், மின்சார வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டத... மேலும் பார்க்க

தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராடுவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராடுவோம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா். கீழடி அகழாய்வு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி மதுரை, சென... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம்: நயினாா் நாகேந்திரன்

முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா். சென்னை வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா் சிறிது நேரம் த... மேலும் பார்க்க