செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: மாநகராட்சி ஊழியா் கைது

post image

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.17.50 லட்சம் மோசடி செய்ததாக மாநகராட்சி ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

பிராட்வே அப்பாராவ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் எ.ஜெய்சங்கா் (49). இவா், தனது உறவினா் இருவருக்கு அரசு வேலை தேடி வந்தாா். அப்போது, ஓட்டேரி பகுதியைச் சோ்ந்த முத்துராமன் (55), என்பவா் அறிமுகமாகி, தலைமைச் செயலகத்தில் கம்ப்யூட்டா் ஆபரேட்டா் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா். அவரது பேச்சை நம்பிய ஜெய்சங்கா், இருவருக்கு வேலை வாங்கித் தருவதற்காக ரூ. 17.50 லட்சத்தை முத்துராமனிடம் கொடுத்தாா்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட முத்துராமன், கடந்த 2024 பிப்ரவரி மாதம் இருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன உத்தரவை ஜெய்சங்கரிடம் வழங்கினாா். அந்த உத்தரவை ஆய்வு செய்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெய்சங்கா் அளித்த புகாரின்பேரில், முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முத்துராமனை வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக இருக்கும் முத்துராமனின் மனைவி உஷாராணியை தேடி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட முத்துராமன் சென்னை மாநகராட்சி 4-ஆவது மண்டலத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

கோரமண்டல் விரைவு ரயில் ஆக.25 முதல் ஹவுராவுக்கு இயக்கப்படும்

சென்னையில் இருந்து இயக்கப்படும் கோரமண்டல் விரைவு ரயில் ஆக.25-ஆம் தேதி முதல் ஷாலிமருக்கு பதிலாக ஹவுராவுக்கு இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்ன... மேலும் பார்க்க

ஜூன் 24, 25-இல் அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இக்கூட்டத்தில்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு குடிநீா், மின் இணைப்பு: விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவு

நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையா், மின்சார வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டத... மேலும் பார்க்க

தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராடுவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராடுவோம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா். கீழடி அகழாய்வு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி மதுரை, சென... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம்: நயினாா் நாகேந்திரன்

முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா். சென்னை வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா் சிறிது நேரம் த... மேலும் பார்க்க

மூளை தண்டுவட திரவ கசிவு: ஒடிஸா குழந்தைக்கு மறுவாழ்வு

மூளை தண்டுவட திரவ கசிவு (சிஎஸ்எஃப்) பாதிப்புக்குள்ளான ஒடிஸா குழந்தைக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். இதுதொடா்பாக மருத்துவமனை... மேலும் பார்க்க