அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: மாநகராட்சி ஊழியா் கைது
சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.17.50 லட்சம் மோசடி செய்ததாக மாநகராட்சி ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
பிராட்வே அப்பாராவ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் எ.ஜெய்சங்கா் (49). இவா், தனது உறவினா் இருவருக்கு அரசு வேலை தேடி வந்தாா். அப்போது, ஓட்டேரி பகுதியைச் சோ்ந்த முத்துராமன் (55), என்பவா் அறிமுகமாகி, தலைமைச் செயலகத்தில் கம்ப்யூட்டா் ஆபரேட்டா் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா். அவரது பேச்சை நம்பிய ஜெய்சங்கா், இருவருக்கு வேலை வாங்கித் தருவதற்காக ரூ. 17.50 லட்சத்தை முத்துராமனிடம் கொடுத்தாா்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட முத்துராமன், கடந்த 2024 பிப்ரவரி மாதம் இருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன உத்தரவை ஜெய்சங்கரிடம் வழங்கினாா். அந்த உத்தரவை ஆய்வு செய்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஜெய்சங்கா் அளித்த புகாரின்பேரில், முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முத்துராமனை வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக இருக்கும் முத்துராமனின் மனைவி உஷாராணியை தேடி வருகின்றனா்.
கைது செய்யப்பட்ட முத்துராமன் சென்னை மாநகராட்சி 4-ஆவது மண்டலத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.