செய்திகள் :

'அதை சொல்வதற்கு நான் யார்?' - கூட்டணி குறித்த திருமாவின் கருத்துக்கு ராமதாஸின் பதில்

post image

பாமக, பாஜக எந்த கூட்டணியில் இருக்கிறதோ அந்த கூட்டணியில் நாங்கள் இணையமாட்டோம் என்று விசிக தலைவர் திருமாவளவனின் கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்திருக்கிறார். 

பாமக
பாமக

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே  ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி கிட்டதட்ட இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.

இதனிடையே பாமக எம்எல்ஏக்கள் அருள் மற்றும் ஜி.கே மணி ஆகியோர்  நெஞ்சுவலி காரணமாக அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பவமும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் திருமாவளவனின் கருத்து தொடர்பாக செய்தியாளர் சந்திப்பின்போது ராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

 திருமாவளவன்
திருமாவளவன்

அதற்கு பதிலளித்த அவர், “அது அவருடைய கருத்து. அவருடைய கொள்கை. அதில் கருத்து சொல்வதற்கு நான் யார்?.. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து, கொள்கை, முரண்பாடு, ஈர்ப்பு உள்ளிட்டவை இருக்கும். அதற்கு நாம் கருத்து சொல்ல வேண்டியதில்லை” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'இனி ஒருமுறை கைரேகை வைத்தால் போதும்!' - ரேஷன் கடைகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் அதிரடி மாற்றம்

இதுவரை தமிழ்நாடு ரேஷன் கடைகளில் PHH மற்றும் PHH AAY அட்டைதாரர்கள் ஒவ்வொரு முறை பொருள்கள் வாங்கும்போதும், இரண்டு முறை கைரேகை பதிவு செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், இனி இரண்டு கைரேகைகள் தேவையில்லை என்று ... மேலும் பார்க்க

'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு அழுத திருச்சி சிவா

நண்பரின் இரங்கல் கூட்டத்தில் எம்.பி திருச்சி சிவா கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.மறைந்த திமுக மூத்த நிர்வாகியும், எம்.பி திருச்சி சிவாவின் நண்பருமான மிசா ராமநாதனின் புகழஞ்சலி கூட்... மேலும் பார்க்க

திறப்பு விழா நடத்துனா மட்டும் போதுமா முதல்வரே? - நெல்லை ஸ்மார்ட் சிட்டி மார்கெட் அவலம்!

'ஸ்மார்ட் சிட்டி மார்கெட்!'நெல்லையில் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா கண்ட ஸ்மார்ட் சிட்டி மார்கெட், நான்கு மாதங்களுக்கு மேலாகியும் செயல்பாட்டுக்கு வராமல் இருப்பது அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகளையும் ... மேலும் பார்க்க

UPSC, TNPSC, ரெயில்வே..! பாடங்கள், காணொளி, குறிப்புகள் வழங்கும் தமிழ்நாடு அரசு; முற்றிலும் இலவசம்!

அரசு வேலை - எப்போதுமே இந்த வேலைக்கு தனி மவுசு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பேர் இந்த வேலையைப் பெற போட்டித் தேர்வுகளை எழுதுகின்றனர். ஆனால், அனைவராலும் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியாது.... மேலும் பார்க்க

Ooty: இந்தி பதாகை சர்ச்சையில் ஊட்டி ரயில் நிலையம்; கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! என்ன நடக்கிறது?

நூற்றாண்டு பழைமை வாய்ந்த ரயில் நிலையங்களில் ஒன்றாக இயங்கி வருகிறது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மலை ரயில் நிலையம். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையத்தை மத்திய அரசின் 'அம்ரித் ... மேலும் பார்க்க