செய்திகள் :

'இனி ஒருமுறை கைரேகை வைத்தால் போதும்!' - ரேஷன் கடைகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் அதிரடி மாற்றம்

post image

இதுவரை தமிழ்நாடு ரேஷன் கடைகளில் PHH மற்றும் PHH AAY அட்டைதாரர்கள் ஒவ்வொரு முறை பொருள்கள் வாங்கும்போதும், இரண்டு முறை கைரேகை பதிவு செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், இனி இரண்டு கைரேகைகள் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு, மாநில அரசு...

இந்த அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரசிக்கு மத்திய அரசு மாநில அரசுக்கு மானியம் வழங்குகிறது. சர்க்கரை, பாம் ஆயில் போன்றவைக்கு மாநில அரசு மானியம் வழங்குகிறது. இதனால், இந்த இரண்டு அட்டைதாரர்கள் அரிசி வாங்கும்போது ஒரு முறையும், சர்க்கரை, பாம் ஆயில்... வாங்கும்போது மற்றொரு முறையும் கைரேகை வைக்க வேண்டியதாக இருந்தது.

கைரேகை
கைரேகை

ஏன் இந்த இரு கைரேகைகள்?

ஏற்கனவே இந்த அட்டைதாரர்களின் கைரேகை அவர்களது ரேஷன் கார்டோடு இணைந்திருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் கைரேகை வைக்கும்போது, உரிய நபருக்குத் பொருட்கள் சென்று சேர்கிறது என்று பதிவாகிறது.

மேலும், இந்த கைரேகைப் பதிவு கணக்கை மத்திய அரசிடம் கொடுத்து தான் மானியத் தொகையை பெறுகிறது மாநில அரசு. இதனால், இந்த கைரேகை அவசியமாகிறது.

இனி...

இது எப்படி இருந்தாலும், இரு கைரேகைகள் பதியும்போது, இரு பில்கள் கொடுக்கப்படுகின்றன. இதற்கான பிராசஸிங் நேரம் ஒவ்வொருவருக்கும் அதிகம் ஆகி, ரேஷன் கடைக்கு சென்றாலே அதிக நேரம் எடுக்கிறது. இதனால், அதிக நேரம் காத்திருத்தல், வேலை பாதித்தல் என மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதை தவிர்க்க, இனி மேல், PHH மற்றும் PHH AAY அட்டைத்தாரர்கள் ஒரு முறை கைரேகை பதிந்தால் போதும் என்கிற நடவடிக்கையை கொண்டுவந்துள்ளது தமிழ்நாடு அரசு.

போக்குவரத்து துறையில் சொதப்பும் DMK மாடல் | Iran - Israel War | ADMK TVK | Imperfect Show 20.6.2025

* ஸ்விஸ் வங்கிகளில் ஒரே ஆண்டில் 3 மடங்கு அதிகரித்த இந்தியர்களின் பணம்?* வெளிநாட்டு மாணவர்களுக்கு மீண்டும் விசா வழங்கும் நடைமுறையை தொடங்கியது அமெரிக்கா!* Iran Vs Israel: இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா; ஈ... மேலும் பார்க்க

`நெருக்கடியால் கூட்டணிக்கு வந்துவிடுவேன் என நினைக்கின்றனர்' - திமுக அரசைச் சாடிய ஜெகன்மூர்த்தி

கடந்த ஏப்ரல் மாதம் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு கலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். அதைத் தொடர்ந்து இ... மேலும் பார்க்க

'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு அழுத திருச்சி சிவா

நண்பரின் இரங்கல் கூட்டத்தில் எம்.பி திருச்சி சிவா கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.மறைந்த திமுக மூத்த நிர்வாகியும், எம்.பி திருச்சி சிவாவின் நண்பருமான மிசா ராமநாதனின் புகழஞ்சலி கூட்... மேலும் பார்க்க

திறப்பு விழா நடத்துனா மட்டும் போதுமா முதல்வரே? - நெல்லை ஸ்மார்ட் சிட்டி மார்கெட் அவலம்!

'ஸ்மார்ட் சிட்டி மார்கெட்!'நெல்லையில் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா கண்ட ஸ்மார்ட் சிட்டி மார்கெட், நான்கு மாதங்களுக்கு மேலாகியும் செயல்பாட்டுக்கு வராமல் இருப்பது அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகளையும் ... மேலும் பார்க்க

UPSC, TNPSC, ரெயில்வே..! பாடங்கள், காணொளி, குறிப்புகள் வழங்கும் தமிழ்நாடு அரசு; முற்றிலும் இலவசம்!

அரசு வேலை - எப்போதுமே இந்த வேலைக்கு தனி மவுசு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பேர் இந்த வேலையைப் பெற போட்டித் தேர்வுகளை எழுதுகின்றனர். ஆனால், அனைவராலும் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியாது.... மேலும் பார்க்க