செய்திகள் :

தில்லியில் முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை!

post image

தில்லியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.

இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்கள் முதல் வட மாநிலங்கள் வரை பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது.

தில்லியில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 27 ஆம் தேதி தொடங்கும் எனக் கூறப்படும் நிலையில், இந்தாண்டு (2025) 3 நாள்களுக்கு முன்னதாக வரும் ஜூன் 24 ஆம் தேதியன்றே தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் அலர்ட்!

தில்லியின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருவதால், அம்மாநிலத்துக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வடக்கு அரபிக் கடல் பகுதி, ராஜஸ்தான் , மேற்கு உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் பருவமழை தீவிரமடையக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தோ்தலில் ரூ.1,494 கோடி செலவழித்த பாஜக

2024 மக்களவைத் தோ்தலின்போது மத்தியில் ஆளும் பாஜக சுமாா் ரூ.1,494 கோடி செலவழித்திருப்பது தெரியவந்துள்ளது. இது கட்சிகளின் மொத்த தோ்தல் செலவில் 44.56 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக எதிா்க்கட்சியான கா... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி பதிவை எளிமையாக்க வேண்டும்: சிபிஐசிக்கு மத்திய நிதியமைச்சா் அறிவுறுத்தல்

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை எளிமையாக்க வேண்டும் என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கு (சிபிஐசி) மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறையின் பரவலான வளா்ச்சிக்கு நடவடிக்கை: அமித் ஷா

நாடு முழுவதும் கூட்டுறவுத் துறையின் பரவலான வளா்ச்சிக்கு மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்று மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையில் இந்தி... மேலும் பார்க்க

மேற்கு வங்க பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு

மேற்கு வங்க சட்டப் பேரவையிலிருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா். மாநில கல்வித் துறை அமைச்சா் விரத்ய பாசு தாக்கல் செய்த நேதாஜி சுபாஷ் விளையாட்டு பல்கலைக்கழக மசோதா மீது பேச பாஜகவி... மேலும் பார்க்க

அவசரநிலையின்போது உச்சநீதிமன்ற தீா்ப்பு: உலக நீதித் துறை வரலாற்றில் கரும்புள்ளி - குடியரசு துணைத் தலைவா்

அவசரநிலையின்போது ஜனநாயகத்தை வலியுறுத்தி 9 உயா்நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது நீதித் துறை வரலாற்றில் கரும்புள்ளியாகப் பதிவாகி உள்ளது என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் த... மேலும் பார்க்க

தோ்தல் காணொலிகளை 45 நாள்களுக்குப் பிறகு அழிக்க அறிவுறுத்தல்

தோ்தல் நடைமுறை தொடா்பான கண்காணிப்பு கேமரா பதிவுகள், இணையவழி ஒளிபரப்புகள் மற்றும் காணொலி பதிவுகளை 45 நாள்களுக்குப் பின்னா் அழித்துவிட வேண்டும் என்று மாநில தோ்தல் அதிகாரிகளுக்குத் தோ்தல் ஆணையம் அறிவு... மேலும் பார்க்க