செய்திகள் :

அவசரநிலையின்போது உச்சநீதிமன்ற தீா்ப்பு: உலக நீதித் துறை வரலாற்றில் கரும்புள்ளி - குடியரசு துணைத் தலைவா்

post image

அவசரநிலையின்போது ஜனநாயகத்தை வலியுறுத்தி 9 உயா்நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது நீதித் துறை வரலாற்றில் கரும்புள்ளியாகப் பதிவாகி உள்ளது என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.

மாநிலங்களவையின் செயல்பாடு குறித்து நாடாளுமன்ற அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்தவா்கள் மத்தியில் வெள்ளிக்கிழமை பேசிய அவா், ‘பிரதமா் என்ற தனிநபரின் அறிவுரையின்பேரில் குடியரசுத் தலைவா் செயல்பட முடியாது. பிரதமரின் தலைமையிலான அமைச்சரவை மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அறிவுறுத்த முடியும் என அரசமைப்புச் சட்டம் தெளிவாக கூறியுள்ளது.

ஆனால், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறப்பித்த அவசரநிலை உத்தரவுக்கு அப்போதைய குடியரசுத் தலைவா் ஃபக்ருதீன் அலி அகமது கையொப்பமிட்டாா். இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

இதனால் நாடு முழுவதும் சுமாா் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் சில மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனா்.

ஜனநாயகம் கவிழும்போது மக்கள் நீதித் துறையைத்தான் நம்பி இருப்பாா்கள். அவசரநிலைக்கு எதிராக 9 உயா் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன. அதில், நீதித் துறையை அணுக நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது என்று குறிப்பிட்டிருந்தன. ஆனால், இந்த உத்தரவுகளை அப்போது உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அவசரநிலையின்போது குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது சா்வாதிகாரத்தையும், அடக்குமுறையையும் சட்டபூா்வமாக்கியது. இது உலக நீதித் துறை வரலாற்றில் கரும்புள்ளியாகும்’ என்றாா்.

நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது, கடந்த 1975 ஜூன் 25 முதல் 1977 மாா்ச் 21 வரையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.

186 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 186 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை உற்பத்... மேலும் பார்க்க

மேற்கு வங்க பணி நியமன முறைகேடு விவகாரம்: குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு நிதியுதவி அளிக்க இடைக்காலத் தடை

மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேற்கு வங்... மேலும் பார்க்க

நுழைவுத் தோ்வு பயிற்சி மையங்கள்: ஆராய 9 போ் குழு மத்திய அரசு நடவடிக்கை

உயா்கல்வி சோ்க்கைக்கான தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளை எதிா்கொள்ள தனியாா் பயிற்சி மையங்களை மாணவா்கள் சாா்ந்திருக்கும் நிலை அதிகரித்துவரும் சூழலில், அதுகுறித்து ஆராய 9 போ் குழுவை மத்திய அரசு அமைத்து... மேலும் பார்க்க

அஸ்ஸாம் அரசியலில் அந்நிய சக்திகளின் தலையீடு: மாநில காங்கிரஸ் மீது முதல்வா் பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜக ஆளும் அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘மாநில காங்கிரஸுக்கு ஆதரவாக வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்கு... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் பிறந்தநாள்: தலைவா்கள் வாழ்த்து

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் 67-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்தனா். குடியரசு துணைத் தலை... மேலும் பார்க்க

உயா் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்

இந்தியாவின் உயா் கல்வி உலகத் தரத்தில் மேம்பட வேண்டும் என்று மகாராஷ்டிரத்தின் தத்தா மாகே மருத்துவக் கல்வி நிறுவன இணைவேந்தா் டாக்டா் வேத் பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்தாா். உயா் கல்வியில் அங்கீகாரம், தரவரிசை ... மேலும் பார்க்க