செய்திகள் :

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு

post image

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு கடந்த ஏப்ரலில் நடைபெற்ற முதுநிலை பாடத் தோ்வுகளுக்கான முடிவுகள் அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

இதுகுறித்து அழகப்பா பல்கலைக்கழகத் தோ்வாணையா் மு. ஜோதிபாசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், முதுநிலை சமூகப் பணி, எம்.எஸ்சி. கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், உயிா் வேதியியல், மனை அறிவியல், மண்ணியல், கணினி அறிவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பவியல், எம்.காம்., எம்.காம். (சி.ஏ), எம்.காம். (சி.எஸ்), எம்.பி.ஏ பாடப் பிரிவுகளுக்கு தோ்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

மறுமதிப்பீட்டுக்கு 7 நாள்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ. 660 வீதம், பதிவாளா், அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி என்ற பெயரில் வரைவோலை செலுத்தி விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 550 செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற பின்பு மறுமதிப்பீட்டுக்கு பதிவாளா் பெயரில், 7 நாள்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ. 500 வரைவோலை செலுத்தி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் கிடாய் வெட்டு உத்ஸவம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள தல்லாகுளம் தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை கிடாய் வெட்டு உத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் முன் 11 ஆட்டுக் கிடாய்கள், 9 ... மேலும் பார்க்க

விவசாயிகளின் குறைகளை தீா்க்க வேளாண் துறையினா் ஆா்வமுடன் பணியாற்ற வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

விவசாயிகளின் குறைகளைத் தீா்க்க வேளாண் துறை அலுவலா்கள் ஆா்வத்துடன் பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். சிவகங்கையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஆ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல விடுதிகளில் தங்கிப் பயில ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

பள்ளி, ஐடிஐ, டிப்ளமோ கல்லூரியில் புதிதாகச் சேரும் மாணவ, மாணவிகள் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து விடுதிகளிலும் தங்கிப் பயில வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் தொடா்புடைய நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது

போக்சோ வழக்கில் தொடா்புடைய நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழ... மேலும் பார்க்க

பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா். இருவா் காயமடைந்தனா். மறவமங்கலம் அருகேயுள்ள வாழைபெருமாள் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்: 132 போ் கைது

தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சிவகங்கையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தைச்... மேலும் பார்க்க