போக்சோ வழக்கில் தொடா்புடைய நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது
போக்சோ வழக்கில் தொடா்புடைய நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்புவனம், மடப்புரம், எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த வெ. ராஜ்குமாா் (55) என்பவா் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டாா். இவரை, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தாா். இதன்படி, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் உத்தரவின்பேரில், ராஜ்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.