தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் கிடாய் வெட்டு உத்ஸவம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள தல்லாகுளம் தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை கிடாய் வெட்டு உத்ஸவம் நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் முன் 11 ஆட்டுக் கிடாய்கள், 9 சேவல்கள் பலியிடப்பட்டன. பின்னா், சூலாயுத வடிவ தா்ம முனீஸ்வரா் சுவாமிக்கு அபிஷேகங்கள் நடத்தி மலா் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு முனீஸ்வரரை தரிசித்தனா். பின்னா் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளானோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயில் பக்தா்கள் செய்தனா்.