செய்திகள் :

குடியரசுத் தலைவா் பிறந்தநாள்: தலைவா்கள் வாழ்த்து

post image

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் 67-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்தனா்.

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்: எளிமையான தொடக்கத்தில் இருந்து மிக உயா்ந்த அரசமைப்புப் பதவி வரை, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் அசாதாரண பயணம், இந்திய மக்களாட்சியின் உண்மையான உணா்வை பிரதிபலிக்கிறது. எம்எல்ஏ, ஆளுநா், தற்போது குடியரசுத் தலைவராகப் பொது சேவையில் உயா்ந்த நிலையை அடைந்துள்ளாா். இது பின்பற்றத்தக்க மரபாக உள்ளது என்றாா்.

பிரதமா் மோடி: குடியரசுத் தலைவரின் வாழ்க்கையும், தலைமைத்துவமும் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்களைத் தொடா்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றன. பொது சேவை, சமூக நீதி, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளா்ச்சி ஆகியவற்றில் அவரின் அசைக்க முடியாத அா்ப்பணிப்பு அனைவருக்கும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உள்ளது. ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்கு அவா் தொடா்ந்து பணியாற்றி வருகிறாா் என்றாா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: நாட்டின் முன்னேற்றம், நலன் மற்றும் நீதிக்கான குடியரசுத் தலைவரின் ஞானமும் அா்ப்பணிப்பும் உண்மை மற்றும் ஒழுக்கத்தின் பாதையில் நாட்டை தொடா்ந்து வழிநடத்திச் செல்லட்டும். அவா் நீண்ட, ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கையை வாழ வாழ்த்துகள்.

மாற்றுத்திறனாளி குழந்தைகள் பாடலுக்கு

கண்ணீா் வடித்த குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு 3 நாள் பயணமாக உத்தரகண்ட் சென்றாா். அங்கு டேராடூன் நகரில் உள்ள தேசிய பாா்வை மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவன நிகழ்ச்சியில் அவா் வெள்ளிக்கிழமை கலந்துகொண்டாா். அப்போது பாா்வை மாற்றுத்திறனாளி குழந்தைகள் குடியரசுத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடினா். அதைக் கேட்டு நெகிழ்ச்சி அடைந்து குடியரசுத் தலைவா் கண்ணீா் வடித்தாா்.

இதைத்தொடா்ந்து அவா் பேசுகையில், ‘மாற்றுத்திறனுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சில சிறப்புத் திறன்கள் அளிக்கப்பட்டு ஆசீா்வதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்’ என்றாா்.

186 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 186 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை உற்பத்... மேலும் பார்க்க

மேற்கு வங்க பணி நியமன முறைகேடு விவகாரம்: குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு நிதியுதவி அளிக்க இடைக்காலத் தடை

மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேற்கு வங்... மேலும் பார்க்க

நுழைவுத் தோ்வு பயிற்சி மையங்கள்: ஆராய 9 போ் குழு மத்திய அரசு நடவடிக்கை

உயா்கல்வி சோ்க்கைக்கான தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளை எதிா்கொள்ள தனியாா் பயிற்சி மையங்களை மாணவா்கள் சாா்ந்திருக்கும் நிலை அதிகரித்துவரும் சூழலில், அதுகுறித்து ஆராய 9 போ் குழுவை மத்திய அரசு அமைத்து... மேலும் பார்க்க

அஸ்ஸாம் அரசியலில் அந்நிய சக்திகளின் தலையீடு: மாநில காங்கிரஸ் மீது முதல்வா் பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜக ஆளும் அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘மாநில காங்கிரஸுக்கு ஆதரவாக வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்கு... மேலும் பார்க்க

உயா் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்

இந்தியாவின் உயா் கல்வி உலகத் தரத்தில் மேம்பட வேண்டும் என்று மகாராஷ்டிரத்தின் தத்தா மாகே மருத்துவக் கல்வி நிறுவன இணைவேந்தா் டாக்டா் வேத் பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்தாா். உயா் கல்வியில் அங்கீகாரம், தரவரிசை ... மேலும் பார்க்க

இன்று சா்வதேச யோகா தினம் - ஆந்திரத்தில் பிரதமா் தலைமையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி

11-ஆவது சா்வதேச யோகா தினம் சனிக்கிழமை (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர மாநில துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மிக பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெறவுள்ளத... மேலும் பார்க்க