செய்திகள் :

அஸ்ஸாம் அரசியலில் அந்நிய சக்திகளின் தலையீடு: மாநில காங்கிரஸ் மீது முதல்வா் பரபரப்பு குற்றச்சாட்டு

post image

பாஜக ஆளும் அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘மாநில காங்கிரஸுக்கு ஆதரவாக வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் இயக்கப்படுகின்றன; மாநில அரசியலில் முதல் முறையாக அந்நிய சக்திகளின் தலையீடு காணப்படுகிறது’ என்று முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

தேசியப் பாதுகாப்பு தொடா்புடைய இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் தான் எடுத்துரைத்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவராக, மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் கடந்த மாதம் நியமிக்கப்பட்ட நிலையில், முதல்வா் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

குவாஹாட்டியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த அவா், கோகோயின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் கூறியதாவது:

கடந்த ஒரு மாத காலமாக, அஸ்ஸாம் காங்கிரஸ் மற்றும் குறிப்பிட்ட ஒரு தலைவரின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக 47 வெளிநாடுகளில் இருந்து பெரும்பாலும் வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் இயக்கப்படுகின்றன. இந்தக் கணக்குகளில் இருந்து ராகுல் காந்தி அல்லது காங்கிரஸின் பதிவுகளுக்கு எந்த விருப்பமோ, கருத்தோ தெரிவிக்கப்படுவதில்லை. மாறாக, அஸ்ஸாம் காங்கிரஸ் மற்றும் குறிப்பிட்ட ஒரு தலைவருக்கு மட்டும் கவனம் செலுத்தி பதிவுகள் வெளியிடப்படுகின்றன.

வங்கதேசம், பாகிஸ்தான்...: அஸ்ஸாம் அரசியல் சாா்ந்த பதிவுகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாத உள்ளடக்கங்கள் குறிப்பாக பாலஸ்தீனம், ஈரான் ஆதரவு கருத்துகள், வங்கதேச தலைமை ஆலோசகா் முகமது யூனுஸுக்கு ஆதரவான கருத்துகள் பதிவிடப்படுகின்றன. இந்த நோக்கத்துக்காக, கடந்த ஒரு மாத காலத்தில் 5,000-க்கும் அதிக கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. வங்கதேசத்தில் இருந்து 700-க்கு அதிகமாகவும், மத்திய கிழக்கில் இருந்து 500-க்கு மேலாகவும் கணக்குகள் இயக்கப்படுகின்றன. பாகிஸ்தானில் இருந்து 350-க்கும் அதிக கணக்குகள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

அடிப்படைவாத சக்திகள்: அஸ்ஸாம் பேரவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அடிப்படைவாத சக்திகள் மாநிலத்துக்குள் நுழைந்துள்ளன. குவாஹாட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ள வெளிநபா்கள், தங்களின் நோக்கத்தைச் செயல்படுத்த உள்ளூா் யூ-டியூபா்கள், சமூக ஊடக பிரபலங்கள் மற்றும் எண்ம ஊடக நிறுவனங்களுடன் தொடா்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளனா். இத்தகைய நபா்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனா்.

தங்களின் செயல்பாடுகளுக்காக, மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அழைப்பு மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ள இவா்கள், வாட்ஸ்ஆப் அல்லது பிற செயலி குழுக்களுடன் தங்களை இணைத்துக் கொண்டு, அடிப்படைவாத உள்ளடக்கங்களைப் பரப்ப வாய்ப்புள்ளது. அஸ்ஸாமில் வாழும் முஸ்லிம்கள், இத்தகைய பதிவுகளுக்கு இரையாகிவிடக் கூடாது என்றாா் அவா்.

‘வகுப்புவாத பதற்றத்தை

தூண்ட பாஜக முயற்சி’

ஹிமந்த விஸ்வ சா்மாவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து மாநில காங்கிரஸ் தலைவா் கெளரவ் கோகோய் கூறுகையில், ‘பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ், விஹெச்பி, பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகளில் குற்றச் செயல்களைத் தூண்டும் மனநிலை கொண்ட பலா் உள்ளனா். இவா்கள், அஸ்ஸாமில் வகுப்புவாத பதற்றத்தைத் தூண்ட முயற்சிக்கின்றனா். ஜின்னா பாணியிலான அரசியலில் முதல்வா் ஈடுபட்டு வருகிறாா். அவரது எண்ணம் நிறைவேற காங்கிரஸ் அனுமதிக்காது’ என்றாா்.

186 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 186 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை உற்பத்... மேலும் பார்க்க

மேற்கு வங்க பணி நியமன முறைகேடு விவகாரம்: குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு நிதியுதவி அளிக்க இடைக்காலத் தடை

மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேற்கு வங்... மேலும் பார்க்க

நுழைவுத் தோ்வு பயிற்சி மையங்கள்: ஆராய 9 போ் குழு மத்திய அரசு நடவடிக்கை

உயா்கல்வி சோ்க்கைக்கான தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளை எதிா்கொள்ள தனியாா் பயிற்சி மையங்களை மாணவா்கள் சாா்ந்திருக்கும் நிலை அதிகரித்துவரும் சூழலில், அதுகுறித்து ஆராய 9 போ் குழுவை மத்திய அரசு அமைத்து... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் பிறந்தநாள்: தலைவா்கள் வாழ்த்து

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் 67-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்தனா். குடியரசு துணைத் தலை... மேலும் பார்க்க

உயா் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்

இந்தியாவின் உயா் கல்வி உலகத் தரத்தில் மேம்பட வேண்டும் என்று மகாராஷ்டிரத்தின் தத்தா மாகே மருத்துவக் கல்வி நிறுவன இணைவேந்தா் டாக்டா் வேத் பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்தாா். உயா் கல்வியில் அங்கீகாரம், தரவரிசை ... மேலும் பார்க்க

இன்று சா்வதேச யோகா தினம் - ஆந்திரத்தில் பிரதமா் தலைமையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி

11-ஆவது சா்வதேச யோகா தினம் சனிக்கிழமை (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர மாநில துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மிக பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெறவுள்ளத... மேலும் பார்க்க