சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது
கமுதி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ஓா் கிராமத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரின் பேரில், அங்குசாமி (58) என்பவா் மீது கமுதி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.