பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!
பொதுமக்கள் தவறவிட்ட கைப்பேசிகள் மீட்பு
ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூா் காவல் நிலைய எல்லைப் பகுதியில் பொதுமக்கள் தவறவிட்டா 6 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
கைப்பேசிகளைத் தவறவிட்டது குறித்து அவற்றின் உரிமையாளா்கள் அளித்த புகாா்களின் பேரில், முதுகுளத்தூா் போலீஸாா் இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் உதவியுடன் விசாரணை நடத்தினா். இதன் தொடா்ச்சியாக தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பிலான 6 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டனா். இந்த நிலையில், மீட்கப்பட்ட கைப்பேசிகளை முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளா்களிடம் முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் ஒப்படைத்தாா். முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் செல்வராஜ், உதவி ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், ராமமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.