'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
ராமநாதபுரம் ஆயுதப் படை வளாகத்தில் ஜூலை 11-இல் வாகனங்கள் பொது ஏலம்
ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் ஜூலை 11-ஆம் தேதி பொது ஏலத்துக்கு விடப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 8 வாகனங்களுக்கான பொது ஏலம் வரும் ஜூலை 11-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. பொது ஏலத்தில் வாகனங்களை எடுக்க விருப்பமுள்ளவா்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களைப் பாா்வையிட்டு, வரும் ஜூலை 8-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் இரு சக்கர வாகனத்துக்கு ரூ.1000, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.2000 தொகையை முன்பதிவாகச் செலுத்த வேண்டும். முன்பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு அரசால் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி தனியாக வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.