செய்திகள் :

4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

post image

2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை வெள்ளிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்குதல், அதன் வாயிலாக பரவலாக உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், புதிய முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், ‘’நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் தீவிரமான கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயிலப் ‘’புதுமைப் பெண்’’ திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயிலப் ’’தமிழ்ப் புதல்வன்’’ திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்குதல், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குச் சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்விச் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியரின் உயர்கல்வித் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு, 2025-26 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின்படி, 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மே 26 ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையிலும், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், இக்கல்வியாண்டில் (2025-2026), உயர்கல்வித் துறையின் சார்பில் வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம்-– உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் – செங்கம் ஆகிய நான்கு இடங்களில் கூடுதலாக 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என மே 30 ஆம் தேதி முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர் மாவட்டம் , கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கல்லூரிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த 4 கல்லூரிகளும், தலா 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்படும். மேலும், ஒவ்வொரு கல்லூரிக்கும் 12 ஆசிரியர்கள் (உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாமாண்டிற்கு மட்டும்) மற்றும் 14 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் வீதம் 4 கல்லூரிகளுக்கு மொத்தம் 48 ஆசிரியர்கள் மற்றும் 56 ஆசிரியரல்லாப் பணியிடங்களைத் தோற்றுவிக்கப்பட்டு, 4 கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கான தொடர் மற்றும் தொடராச் செலவினத்திற்காக மொத்தம் ரூ.8 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த பகுதிகளிலுள்ள சுமார் 1,120 மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

இன்று தொடங்கி வைக்கப்பட்ட புதிய 4 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்த்து தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ரூ.36 கோடியே 18 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம், துணை வேந்தர், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் , உயர்கல்வித் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சுவிஸ் வங்கியில் மூன்று மடங்காக அதிகரித்த இந்தியர்களின் பணம்!

முருக பக்தர்கள் மாநாடு: வாகனங்களுக்கு பாஸ் தேவையில்லை!

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு பாஸ் தேவை என்ற நிபந்தனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று ரத்து செய்துள்ளது. இந்து முன்னணி சார்பில் மதுரையில் நாளை மறுநாள் (... மேலும் பார்க்க

ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது ஒகேனக்கல்!: அருவிகளில் குளிக்க தடை

பென்னாகரம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.கர்நாடக மாநிலத... மேலும் பார்க்க

தந்தை இறந்ததால் படிக்க முடியாமல் தவித்த மாணவிக்கு கல்லூரியில் படிக்க உதவிய ஆட்சியர்!

கோவை: தந்தை இறந்ததால் உயர்கல்வி படிக்க முடியாமல் தவித்து வந்த மாணவியை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாா் க.கிரியப்பனவா் இரவு 7 மணிக்கு கல்லூரிக்கு அழைத்து கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கை ஆணை வாங்கி கொட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் உண்ணாவிரதம்

கிருஷ்ணகிரி: மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாத தமிழக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

சுவிஸ் வங்கியில் மூன்று மடங்காக அதிகரித்த இந்தியர்களின் பணம்!

சுவிஸ் வங்கியில் இந்திய பெருமுதலாளிகளின் முதலீடு 2024 ஆம் ஆண்டில் மூன்று மடங்காக அதிகரித்து ரூ.37,600 கோடியாக உள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி அறிவித்துள்ளது. சுவிஸ் வங்கியில் இந்திய பெருமுதலாளிக... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்த நிலையில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்... மேலும் பார்க்க