செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு

post image

பென்னாகரம்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்த நிலையில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணைக்க வரும் உபரி நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கபினி அணை மொத்த கொள்ளளவு ஆன 84 கன அடியை நெருங்க உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் வினாடிக்கு 10,000 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதிகளுக்கு கர்நாடக மாநில அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது.

கர்நாடக அணையில் இருந்து புதன்கிழமை திறக்கப்பட்ட தண்ணீர் வியாழக்கிழமை இரவு தமிழகம் வந்தடைந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து அளவானது வியாழக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 6,500 கன அடியாகவும், இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 9,000 கன அடி ஆகவும்,9 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,000 கனஅடி என ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து ஐவார் பாணியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.

வளர்ப்பு மகனால் தங்கைக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோவில் கைது!

ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது ஒகேனக்கல்!: அருவிகளில் குளிக்க தடை

பென்னாகரம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.கர்நாடக மாநிலத... மேலும் பார்க்க

4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை வெள்ளிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதி... மேலும் பார்க்க

தந்தை இறந்ததால் படிக்க முடியாமல் தவித்த மாணவிக்கு கல்லூரியில் படிக்க உதவிய ஆட்சியர்!

கோவை: தந்தை இறந்ததால் உயர்கல்வி படிக்க முடியாமல் தவித்து வந்த மாணவியை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாா் க.கிரியப்பனவா் இரவு 7 மணிக்கு கல்லூரிக்கு அழைத்து கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கை ஆணை வாங்கி கொட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் உண்ணாவிரதம்

கிருஷ்ணகிரி: மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாத தமிழக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

சுவிஸ் வங்கியில் மூன்று மடங்காக அதிகரித்த இந்தியர்களின் பணம்!

சுவிஸ் வங்கியில் இந்திய பெருமுதலாளிகளின் முதலீடு 2024 ஆம் ஆண்டில் மூன்று மடங்காக அதிகரித்து ரூ.37,600 கோடியாக உள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி அறிவித்துள்ளது. சுவிஸ் வங்கியில் இந்திய பெருமுதலாளிக... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8218 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் கபினியிலிருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீர் வரத்து காரணமாக வியாழக்கிழமை காலை வினாடிக்கு 6,829 கன அடி வீதம... மேலும் பார்க்க