டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரு.86.59 ஆக முடிவு!
அடுத்த 2 நாள்களுக்குக் குடையின்றி வெளியே செல்ல வேண்டாம்..!
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
லேசான மழை..
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 20 முதல் 26-06-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை..
ஜூன் 20 முதல் 22 வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
மீனவர்கள்..
மத்தியகிழக்கு மற்றும் அதனை ஓட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், குஜராத், கொங்கன், கோவா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாள்கிளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குசெல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிக்க:அதிர்ஷ்ட வாய்ப்புகள் காத்திருக்கிறது இந்த ராசிக்கு: வார பலன்கள்!