அனைத்து பைக்களுக்கும் ஏபிஎஸ் கட்டாயம்! 2 ஹெல்மெட்
சாலை விபத்துகளைக் குறைத்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு, அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் எனப்படும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பைக் கட்டாயமாக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அது மட்டுமல்லாமல், வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் விற்பனையாகும் இரு சக்கர வாகனங்களுடன் கட்டாயமாக இரண்டு ஹெல்மெட்கள் வழங்க வேண்டும் என்பதும் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
சாலையில் வேகமாகச் செல்லும் வாகனங்களை பிரேக் போட்டு நிறுத்தும்போது, சக்கரம் சிக்கிக் கொண்டு வாகனம் சாலையில் சறுக்கிச் செல்லாமல் இருப்பதற்கான நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட பிரேக் அமைப்புகள் ஏபிஎஸ் என்று அழைக்கப்படுகிறது.